யூஸ் பண்ண ஆணுறையை.. கோயில் உண்டியலில் போட்ட 60 வயது ஆசாமி.. கொத்தாக தூக்கி சென்ற போலீஸ்..!
கோயில் உண்டியலில் ஆணுறைகளை வீசி சென்ற நபர் கைதானார்
பெங்களூரு: மங்களூருவில் பல கோயில்களின் உண்டியல்களில் கிடந்த ஆணுறைகளை பார்த்து அதிகாரிகள் மிரண்டே போய்விட்டனர்.. இது சம்பந்தமாக ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
மங்களூரில் நிறைய வழிபாட்டு தலங்கள் உள்ளன.. சுற்றுவட்டாரம் மட்டுமல்லாமல், பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் இங்குள்ள கோயில்களுக்கு வந்து செல்வது வழக்கம்..
இந்நிலையில், கடந்த டிசம்பர் 27ம் தேதி கோராஜானா பகுதியில் உள்ள கோவில் உண்டியலில் ஆணுறை ஒன்று இருந்துள்ளது.. அந்த ஆணுறை ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு, அதன்பிறகு கோயில் உண்டியலில் போடப்பட்டுள்ளது..

ஆணுறை
வழக்கம்போல் உண்டியலை உடைத்த கோயில் நிர்வாகம், திடீரென அதில் ஆணுறை இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. அதனால் உடனடியாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது... எனவே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கோயிலில் இருக்கும் சிசிடிவி கேமராவையும், அந்த பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் மற்ற சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர்..

உண்டியல்
அதில், ஒருவர் உண்டியலில் எதையோ போட்டு சென்றது பதிவாகி இருந்தது... இதையடுத்து, அந்த நபரின் அடையாளத்தை வைத்து, அவரை போலீசாரும் கண்டுபிடித்தனர்.. துருவி துருவி நடத்தப்பட்ட விசாரணையில், அவர் இதுபோன்ற ஏராளமான கோவில்களின் உண்டியல்களிலும் ஆணுறையை போட்டு வருவதை ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக மங்களூர் போலீஸ் கமிஷனர் சொல்லும்போது, பல்வேறு கோவில்களில் கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அந்த நபர் மீது 5 கேஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது...

ஆட்டோ டிரைவர்
அவர் பெயர் தேவதாஸ் தேசாய்.. 62 வயதாகிறது.. 20 வருடங்களாகவே மங்களூரில் வசித்து வருகிறார்.. 15 வருடமாக ஆட்டோ ஓட்டி வந்துள்ளார்.. இவர் ஏற்கனவே, அந்த பகுதியில் உள்ள மசூதிகளில், பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளை வீசி வந்துள்ளார்... ஆட்டோ டிரைவர் என்பதால், எந்தெந்த மசூதிகளில், கோயில்களில் ஆணுறையை வீசினார் என்பதை தெளிவாக சொல்கிறார்..

விசாரணை
இந்த பயன்படுத்திய ஆணுறைகளை எல்லாம், குப்பைகளில் இருந்து எடுத்து வருவாராம்.. அதை கொண்டு வந்து கோயில், மசூதிகளில் போட்டுவிட்டு செல்வாராம்.. இப்போது தொடர்ந்து தேவதாஸிடம் விசாரணை நடந்து வருகிறது... கோயில் உண்டியலில் ஆணுறையை வீசி செல்வது யாராக இருக்கும் என்ற குழப்பம் நீண்ட நாட்களாகவே நீடித்து வந்த நிலையில், தற்போது குற்றவாளி கைதாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications