பெங்களூரில் உச்சக்கட்ட பரபரப்பு! ஒரே நேரத்தில் 7 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. நடந்தது என்ன
பெங்களூர்: பெங்களூரில் ஒரே நேரத்தில் 7 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரில் உள்ள 7 பள்ளிகளுக்கு இன்று காலை மெயில் ஒன்று வந்துள்ளது. அதில் அந்த 7 பள்ளிகளிலும் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாகப் பெங்களூர் காவல் ஆணையர் கமல் பந்த் கூறுகையில், நகரில் உள்ள ஏழு பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாகத் தெரிவித்தார்.

போலீசார்
இதையடுத்து போலீஸ் குழுக்கள் மிக விரைவில் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். வெடிகுண்டு மிரட்டல் வந்த உடன் மாணவர்கள் அனைவரும் பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், மேலும், பள்ளி வளாகங்களில் வெடிகுண்டு சோதனையையும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசார்
காலை 11 மணியளவில் 7 பள்ளிகளுக்கும் இந்த மெயில் வந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆணையர் கமல் பந்த் மேலும் கூறுகையில், "மின்னஞ்சலின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கி உள்ளோம். மின்னஞ்சல் எங்கே இருந்து அனுப்பப்பட்டது என்பதைக் கண்டறிய முயல்கிறோம். இப்போது தான் விசாரணையைத் தொடங்கி உள்ளோம். விரைவில் கூடுதல் தகவல்களைக் கண்டறிவோம் என நம்புகிறோம்" என்றார்.

மின்னஞ்சல்
பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட அந்த மின்னஞ்சலில், "உங்கள் பள்ளியில் மிகவும் சக்திவாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. இது சும்மா ஜோக் இல்லை. உங்கள் பள்ளியில் மிகவும் சக்திவாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. உடனடியாக போலீசாரை அழைக்கவும். நூற்றுக்கணக்கான உயிர்கள் ஆபத்தில் உள்ளது. தாமதிக்க வேண்டாம், இப்போது எல்லாம் உங்கள் கையில் மட்டுமே உள்ளது!" என்று கூறப்பட்டுள்ளது.

மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகள்
1. டெல்லி பப்ளிக் பள்ளி, வர்தூர்
2. கோபாலன் சர்வதேச பள்ளி
3. புதிய அகாடமி பள்ளி
4. செயின்ட் வின்சென்ட் பால் பள்ளி
5. இந்தியன் பப்ளிக் பள்ளி, கோவிந்த்புரா
6.எபினேசர் சர்வதேச பள்ளி, எலக்ட்ரானிக் சிட்டி












Click it and Unblock the Notifications