Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெங்களூரில் மது அருந்தி சுயநினைவை இழந்த பெண் சாப்ட்வேர் என்ஜினியர்.. கூட்டு பாலியல் பலாத்காரம்?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் போதை தலைக்கேறி சுயநினைவை இழந்த பெண் சாப்ட்வேர் என்ஜினீயர் தன்னை சிலர் கூட்டு பலாத்காரம் செய்திருப்பதாக புகார் கொடுத்துள்ளார். இதுபற்றி பெங்களூர் போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் விசாரணைக்கு பிறகே இதை உறுதி செய்ய முடியும் என போலீசார் தெரிவித்தனர்.

இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் நகரம் பெங்களூர். இந்த நகரம் தான், இந்தியாவின் ஐடி நிறுவனங்களின் தலைநகரமாகவும் பார்க்கப்படுகிறது. உலகின் அத்தனை பெரிய ஐடி நிறுவனங்களும் பெங்களூரில் இருக்கின்றன. பெங்களூரில் ஏராளமான தொழில்கள் இருந்தாலும், கம்ப்யூட்டர் சாப்ட்வேர் தொழில்கள் தான் பிரதானமாக இருக்கின்றன. நாடு முழுவதும் இருந்து வந்து லட்சக்கணக்கான பேர் பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள்.

A female software engineer who lost consciousness after drinking alcohol in Bengalore was gang-raped?

இந்நிலையில் பெங்களூர் கிழக்கு மண்டல போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் இளம் பெண் ஒருவர் அந்த பகுதியில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். கடந்த டிசம்பர் 12-ந் தேதி இரவு அந்த இளம்பெண் கோரமங்களாவில் உள்ள கேளிக்கை விடுதிக்கு (பப்) சென்றுள்ளார் அங்கு இரவு 7.30 மணியில் இருந்து இரவு 11 மணி வரை அவர் பப்பில் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த இளம் பெண்ணுக்கு போதை தலைக்கேறிய நிலையில், சுயநினைவை இழந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சுயநினைவு திரும்பியதும் நள்ளிரவில் அவர் கண்விழித்து பார்த்துள்ளார். அப்போது அவர், ஆடுகோடி, தேவேகவுடா லே-அவுட் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு இருந்திருக்கிறார். இதையடுத்து அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து இளம்பெண்ணை மீட்டார்கள்.

இந்த நிலையில், கோரமங்களா காவல் நிலையத்தில் இளம்பெண் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், டிசம்பர் 12ம் தேதி இரவு 7.30 மணி அளவில் கோரமங்களாவில் உள்ள தனியார் பப் ஒன்றில மது அருந்திக் கொண்டிருந்தேன். மது அருந்தியபோதே நான் சுயநினைவை இழந்து விட்டேன். இரவு 11.30 மணிக்கு மேல் 12.30 மணிவரை எனக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் என்னை சில நபர்கள் கூட்டாக சேர்ந்து பலாத்காரம் செய்திருக்கலாம் என்றும், எனக்கு பாலியல் தொல்லை கொடுத்திருப்பதற்கான சந்தேகமும் எழுந்திருக்கிறது. அதுபற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும், என்று கூறி இருந்தார்.

இளம்பெண் அளித்த புகாரின் பேரில் கோரமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கடந்த 12-ந் தேதி இரவு பப்பில் இளம்பெண்ணுடன் யாரெல்லாம் சேர்ந்து மது அருந்தினார்கள். அவருடன் இருந்த நபர்கள் பற்றியும், கேளிக்கை விடுதியில் இருந்து எப்படி அந்த பெண் தேவேகவுடா லே-அவுட்டுக்கு சென்றார் என்பது பற்றியும், அவரை மர்மநபர்கள் கூட்டாக பலாத்காரம் செய்தார்களா? என்பது குறித்தும் கோரமங்களா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் சி.கே.பாபா கூறும் போது, பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றும் இளம்பெண் தான் சுயநினைவை இழந்த போது, தன்னை சிலர் கூட்டாக பலாத்காரம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், விசாரித்து வருகிறோம். இந்த சம்பவம் கடந்த 12-ந் தேதி இரவு 11.30 மணியில் இருந்து நள்ளிரவு 12.30 மணிக்குள் நடந்திருக்கலாம் என அந்த பெண் கூறியுள்ளார்-

ஆனால் சம்பவம் நடந்ததாக இளம்பெண் கூறிய நேரத்திற்கும் போலீசார் நடத்திய விசாரணைக்கும், பொருத்தமானதாக இல்லை. நேரம் வித்தியாசமாக உள்ளது. என்றாலும், இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம். விசாரித்த பிறகே அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்பது தெரியவரும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+