பெங்களூரில் மது அருந்தி சுயநினைவை இழந்த பெண் சாப்ட்வேர் என்ஜினியர்.. கூட்டு பாலியல் பலாத்காரம்?
பெங்களூர்: பெங்களூரில் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் போதை தலைக்கேறி சுயநினைவை இழந்த பெண் சாப்ட்வேர் என்ஜினீயர் தன்னை சிலர் கூட்டு பலாத்காரம் செய்திருப்பதாக புகார் கொடுத்துள்ளார். இதுபற்றி பெங்களூர் போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் விசாரணைக்கு பிறகே இதை உறுதி செய்ய முடியும் என போலீசார் தெரிவித்தனர்.
இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் நகரம் பெங்களூர். இந்த நகரம் தான், இந்தியாவின் ஐடி நிறுவனங்களின் தலைநகரமாகவும் பார்க்கப்படுகிறது. உலகின் அத்தனை பெரிய ஐடி நிறுவனங்களும் பெங்களூரில் இருக்கின்றன. பெங்களூரில் ஏராளமான தொழில்கள் இருந்தாலும், கம்ப்யூட்டர் சாப்ட்வேர் தொழில்கள் தான் பிரதானமாக இருக்கின்றன. நாடு முழுவதும் இருந்து வந்து லட்சக்கணக்கான பேர் பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள்.

இந்நிலையில் பெங்களூர் கிழக்கு மண்டல போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் இளம் பெண் ஒருவர் அந்த பகுதியில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். கடந்த டிசம்பர் 12-ந் தேதி இரவு அந்த இளம்பெண் கோரமங்களாவில் உள்ள கேளிக்கை விடுதிக்கு (பப்) சென்றுள்ளார் அங்கு இரவு 7.30 மணியில் இருந்து இரவு 11 மணி வரை அவர் பப்பில் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த இளம் பெண்ணுக்கு போதை தலைக்கேறிய நிலையில், சுயநினைவை இழந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சுயநினைவு திரும்பியதும் நள்ளிரவில் அவர் கண்விழித்து பார்த்துள்ளார். அப்போது அவர், ஆடுகோடி, தேவேகவுடா லே-அவுட் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு இருந்திருக்கிறார். இதையடுத்து அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து இளம்பெண்ணை மீட்டார்கள்.
இந்த நிலையில், கோரமங்களா காவல் நிலையத்தில் இளம்பெண் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், டிசம்பர் 12ம் தேதி இரவு 7.30 மணி அளவில் கோரமங்களாவில் உள்ள தனியார் பப் ஒன்றில மது அருந்திக் கொண்டிருந்தேன். மது அருந்தியபோதே நான் சுயநினைவை இழந்து விட்டேன். இரவு 11.30 மணிக்கு மேல் 12.30 மணிவரை எனக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் என்னை சில நபர்கள் கூட்டாக சேர்ந்து பலாத்காரம் செய்திருக்கலாம் என்றும், எனக்கு பாலியல் தொல்லை கொடுத்திருப்பதற்கான சந்தேகமும் எழுந்திருக்கிறது. அதுபற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும், என்று கூறி இருந்தார்.
இளம்பெண் அளித்த புகாரின் பேரில் கோரமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கடந்த 12-ந் தேதி இரவு பப்பில் இளம்பெண்ணுடன் யாரெல்லாம் சேர்ந்து மது அருந்தினார்கள். அவருடன் இருந்த நபர்கள் பற்றியும், கேளிக்கை விடுதியில் இருந்து எப்படி அந்த பெண் தேவேகவுடா லே-அவுட்டுக்கு சென்றார் என்பது பற்றியும், அவரை மர்மநபர்கள் கூட்டாக பலாத்காரம் செய்தார்களா? என்பது குறித்தும் கோரமங்களா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் சி.கே.பாபா கூறும் போது, பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றும் இளம்பெண் தான் சுயநினைவை இழந்த போது, தன்னை சிலர் கூட்டாக பலாத்காரம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், விசாரித்து வருகிறோம். இந்த சம்பவம் கடந்த 12-ந் தேதி இரவு 11.30 மணியில் இருந்து நள்ளிரவு 12.30 மணிக்குள் நடந்திருக்கலாம் என அந்த பெண் கூறியுள்ளார்-
ஆனால் சம்பவம் நடந்ததாக இளம்பெண் கூறிய நேரத்திற்கும் போலீசார் நடத்திய விசாரணைக்கும், பொருத்தமானதாக இல்லை. நேரம் வித்தியாசமாக உள்ளது. என்றாலும், இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம். விசாரித்த பிறகே அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்பது தெரியவரும் என்றார்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு












Click it and Unblock the Notifications