Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்போது ஹிஜாப் விவகாரம்.. இப்போது பைபிள் சர்ச்சை.. கர்நாடகாவில் அரங்கேறும் அடுத்தடுத்து சர்ச்சைகள்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் அடுத்தடுத்து சர்ச்சை சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், ஹிஜாப் விவகாரத்திற்கு அடுத்து இப்போது பைபிள் தொடர்பான சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அண்டை மாநிலமான கர்நாடகாவில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய ஹிஜாப் விவகாரம் உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு பின்னர் தான் சற்று ஓய்ந்தது.

தொடர்ந்து இந்து கோயில்கள் முன்பு இருந்த முஸ்லீம் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும், முஸ்லீம் இறைச்சி வியாபாரிகள் ஹலால் செய்யப்படாத இறைச்சியை விற்க வேண்டும் என்ற சர்ச்சையும் எழுந்தது.

கர்நாடகா

கர்நாடகா

இந்நிலையில், இப்போது அங்கு அடுத்து சர்ச்சையைக் கிளம்பி உள்ளது. கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள கிளாரன்ஸ் உயர்நிலைப் பள்ளியின் செயல் சலசலப்பை உருவாக்கி உள்ளது. அதாவது தங்கள் பள்ளிகளில் புனித புத்தகமான பைபிளை எடுத்துச் செல்வதை எதிர்க்க மாட்டோம் என்று பெற்றோரிடம் உறுதிமொழி வாங்கி உள்ளது. இந்த நடவடிக்கைக்கு சில வலதுசாரி குழுக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது கர்நாடக கல்விச் சட்டத்தை மீறும் வகையில் உள்ளதாக வலதுசாரி அமைப்புகள் சாடியுள்ளன.

பைபிள்

பைபிள்

இந்த விவகாரம் குறித்து இந்து ஜனஜக்ருதி சமிதி மாநில செய்தித் தொடர்பாளர் மோகன் கவுடா கூறுகையில், "இந்த பள்ளி கிறிஸ்தவர் அல்லாத மாணவர்களை பைபிளை படிக்க வற்புறுத்துகிறது" என்று குற்றஞ்சாட்டி உள்ளார். அதாவது கிறிஸ்தவர் அல்லாத மாணவர்களையும் பள்ளி நிர்வாகம் பைபிளை படிக்க வற்புறுத்துவதாக வலதுசாரிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இருப்பினும், பள்ளி நிர்வாகம் தாங்கள் பைபிள் அடிப்படையிலான கல்வியை வழங்குவதாக விளக்கம் அளித்துள்ளது.

 பள்ளி விளக்கம்

பள்ளி விளக்கம்

அந்த பள்ளியின் +1 மாணவர் சேர்க்கை படிவத்தில், "உங்கள் குழந்தை தார்மீக மற்றும் ஆன்மீக நலனுக்காக மார்னிங் அசெம்பிளி ஸ்கிரிப்ச்சர் கிளாஸ் மற்றும் கிளப்கள் உட்பட அனைத்து வகுப்புகளிலும் கலந்து கொள்வார்கள் என்றும் அதை நாங்கள் எதிர்க்க மாட்டோம் என்றும் உறுதி அளிக்கிறோம். அவர் கிளாரன்ஸ் உயர்நிலைப் பள்ளியில் தங்கியிருந்த காலத்தில் பைபிள் வைத்திருப்பதையும் எதிர்க்க மாட்டோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கர்நாடகா

கர்நாடகா

கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் தான், பள்ளிகளில் பகவத்கீதையை அறிமுகப்படுத்தும் திட்டம் குறித்த பேச்சு எழுந்து இருந்தது. பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்ப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக குஜராத் மாநிலத்தில் 6-12 வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தது.

 ஹிஜாப் விவகாரம்

ஹிஜாப் விவகாரம்

கர்நாடகாவில் கடந்த ஜனவரி மாதம் முதலே ஹிஜாப் சர்ச்சை இருந்து வந்தது. முதலில் அங்குள்ள சில பியு கல்லூரிகளில் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டது. அப்படியே அந்தத் தடை வேறு சில அண்டை மாவட்டங்களுக்கும் பரவியது. கல்லூரி நிர்வாகங்களின் இந்த உத்தரவை எதிர்த்து முஸ்லீம் மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து முஸ்லீம் மாணவிகள் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்து ராஜ் அமர்வு, கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று தெரிவித்தனர். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+