பெங்களூரில் நிலைமை மோசம்.. ஊரெல்லாம் குப்பை.. கவனத்தை திருப்பிய கர்நாடக பாஜக.. கவனிக்கும் காங்கிரஸ்
பெங்களூரு: அடிப்படை பிரச்னைகளை தீர்க்காத காங்கிரஸ் அரசை கண்டித்து, கர்நாடக பாஜக, இன்று போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
2 நாட்களுக்கு முன்பு, பாஜக ஆலோசனை கூட்டம் மல்லேஸ்வரத்தில் நடந்தது.. அப்போது, பெங்களூருவின் அடிப்படை பிரச்சனைகள் தொடர்பாக, மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக் தலைமையில், அக்கட்சியின் பெங்களூரு எம்எல்ஏக்கள், முன்னாள் மேயர்கள், முன்னாள் கவுன்சிலர்கள் போன்றோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

விஜயேந்திரா: ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு விஜயேந்திரா சொன்னபோது, "பெங்களூரு நகரின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்காத, காங்கிரஸ் அரசை கண்டித்து, 28ம் தேதி அனைத்து வார்டுகளிலும் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
நகர மக்களுக்கு நீதி கிடைக்க செய்ய, பாஜக தொடர்ந்து போராடும். வெறும் பெயரளவுக்கு போராட்டம் நடத்தாமல், பெரிய அளவில் நடத்துவோம். பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம்.
பெங்களூர்: இரண்டு நாட்கள் பெய்த மழைக்கே, சாலைகளில் வாகனங்கள் ஓட முடியாத அளவுக்கு தண்ணீர் தேங்கியது. மாநிலத்தில் அதிகமான மக்கள், வரி செலுத்துவது பெங்களூரில் தான்.
காங்கிரஸ் இப்போது ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகியும், இதுவரை எந்த வளர்ச்சிப் பணிகளும் நடக்கவில்லை. நகரின் வளர்ச்சிக்கு 1 ரூபாய் கூட நிதி வழங்கவில்லை. சாலைகளில் பள்ளங்கள் தான் காணப்படுகின்றன... குப்பை, கழிவுகள் சரியாக நிர்வகிக்கப்படவில்லை. அதிக எண்ணிக்கையிலான அமைச்சர்கள், பெங்களூரில் இருந்தும், வளர்ச்சிப் பணிகள் நடக்கவில்லை... கனமழைக்கான தயார்நிலை குறித்து நகர ஆணையர் உத்தரவாதம் அளித்த போதிலும், நிலைமை மோசமாகவே இருக்கிறது.
சொத்துக்கள்: அரசு சொத்துக்கள் மற்றும் வாகனங்களுக்கு வரி மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது.. பதிவு செய்தாலும், அது பெங்களூரு மக்களுக்கு உதவவில்லை,.. பெங்களூருவில் அதிக அமைச்சர்கள் இருந்தாலும், நகரின் வளர்ச்சி பற்றி யாரும் கவலைப்படவில்லை.. அதனால், இந்த பிரச்சனைகள் குறித்து, கவனத்தை ஈர்த்து, பெங்களூரு மக்களுக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தப்படுகிறது" என்றார் விஜயேந்திரர்.
ஏற்கனவே கர்நாடக பாஜகவில் புயல்வீசிக் கொண்டிருக்கிறது.. வருகிற 31ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் தருவதாக தலைமறைவாகியிருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ வெளியிட்டிருக்கிறார்.. இப்படிப்பட்ட சூழலில், காங்கிரஸை கண்டித்து, இன்று முன்னெடுத்துள்ள போராட்டம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்'












Click it and Unblock the Notifications