நீங்க நடிகையா இல்லை பாலியல் தொழிலாளியா? 3BHK நடிகை சைத்ராவிற்கு ஆபாச மெசேஜ்! அடுத்து ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: தமிழில் 3 பிஎச்கே படத்தில் நடித்த நடிகை சைத்ரா ஆச்சாரிடம், ''நீங்கள் நடிகையா அல்லது பாலியல் தொழிலாளியா?'' என்று போலீஸ் உடை அணிந்த நபரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து மெசேஜ் போனது. இதையடுத்து நடிகை சைத்ரா ஆச்சார் செய்த சம்பவத்தால் அந்த நபர் உடனடியாக மன்னிப்பு கோரி அவரிடம் சரணடைந்தார். என்ன நடந்தது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

கர்நாடகாவை சேர்ந்தவர் சைத்ரா ஆச்சார். இவர் கன்னடம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். பாடகியாகவும் வலம் வருகிறார். சைத்ரா ஆச்சார் தமிழில் சித்தார்த்

are-you-heroin-or-3-bhk-actress-chiathra-achar-received-bad-message-from-instagram
, சரத்குமார், தேவையானி நடித்த 3 பிஎச்கே திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றார்.

சைத்ரா ஆச்சார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பல்வேறு போட்டோக்களை பதிவிட்டு வுருகிறார். இந்நிலையில் தான் இன்ஸ்டாகிராமில் மகேஷ் ஒசமணி என்பவர் அவருக்கு ஒரு மெசேஜ் அனுப்பினார்.

அதில் ''நீங்கள் ஹீரோயினா அல்லது பாலியல் தொழிலாளியா?'' என கேள்வி எழுப்பியதோடு, கண்ணியத்துடன் நடந்து கொள்ளுங்கள் என மெசேஜ் அனுப்பியிருந்தார். இதனால் ஷாக் ஆன சைத்ரா ஆச்சார் மெசேஜ் அனுப்பிய நபரின் புரோபைலை பார்த்தார். அதில் போலீஸ் உடையில் ஒருவரின் போட்டோ இருந்தது. இதனால் போலீஸ்காரர் ஒருவர் தனக்கு எதிராக ஆபாச கருத்துகளை வெளியிட்டுள்ளதாக நினைத்து அதிர்ச்சியில் உறைந்தார்.

இதையடுத்து, அந்த நபருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அவர் வெளியிட்ட ஆபாச கருத்துகளை செல்போனில் ஸ்கிரீன்ஷாட் எடுத்து இன்ஸ்டாகிராமில் பெங்களூர் போலீசாரை டேக் செய்து புகாரளித்தார். அதில், ''மரியாதைக்குரிய பெங்களூர் போலீஸ் துறையே.. உங்களின் துறையை சேர்ந்ததாக காணப்படும் இந்த மகேஷ் ஒசமணியின் கேள்விக்கு தயவு செய்து பதில் சொல்ல முடியுமா?'' என்று புகாரளித்தார்.

இதனால் பதறிப்போன அந்த நபர், இன்ஸ்டாகிராமில் தான் வெளியிட்ட பதிவுகளை அழித்துள்ளார். அத்துடன் சைத்ரா ஆச்சாரிடம் தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டு கொண்டார். அதுமட்டுமின்றி, ''நான் உங்களது ரசிகன். நான் தெரியாமல் கருத்து பதிவிட்டுள்ளேன். நீங்கள் எனக்கு எதிராக வெளியிட்டுள்ள புகைப்படம், கருத்துகளை இன்ஸ்டாகிராமில் இருந்து அகற்றிவிடுங்கள்'' என்று சைத்ரா ஆச்சாரிடம் அந்த நபர் கேட்டு கெஞ்சினார். இதுதொடர்பாக அவருக்கு கன்னடத்தில் மெசேஜ் அனுப்பினார். இந்த ஸ்கிரின்ஷாட்டையும் சைத்ரா ஆச்சார் பகிர்ந்துள்ளார்.

இதுபற்றி பெங்களூர் போலீசாரிடம் கேட்டபோது, ''ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய நபர் போலீஸ் துறையில் பணியாற்றவில்லை. அவர் ஆபாசமாக மெசேஜ் அனுப்பி உள்ளார். ஆனா் வழக்குப்பதிவு இன்னும் செய்யவில்லை. ஏனென்றால் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். சம்பந்தப்பட்டவர் வழக்குப்பதிவு செய்ய கோரினால் அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுப்போம்'' என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+