பரபரப்பு.. பெண் கவுன்சிலரின் கையை பிடித்து இழுத்த பாஜகவினர்.. கொதித்தெழுந்த கர்நாடக காங்கிரஸ்..!
பெண் கவுன்சிலர் மீது நடத்திய தாக்குதலுக்கு டிகே சிவக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்
பெங்களூரு: "இது பாஜகவின் கலாசாரம்.. யாரை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற பழக்கத்தை அக்கட்சியினர் ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்... பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் தலைவர்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது" என்று காங்கிரஸ் பெண் கவுன்சிலரை கையை பிடித்து இழுத்த விவகாரம் குறித்து டி.கே.சிவக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாகல்கோட்டை மாவட்டம் மகாலிங்கபுரா புரசபை தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்து முடிந்தது.. அப்போது அங்கு ஏராளமான பாஜக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் சூழ்ந்திருந்தனர்.

ஒருகட்டத்தில் அவர்கள் 2 இரு தரப்பினரிடையே மோதலும் ஏற்பட்டது.. அதில், காங்கிரஸ் பெண் கவுன்சிலர் சவிதா என்பவரை, பாஜகவை சேர்ந்த சித்து சவதி எம்எல்ஏ கையை பிடித்து இழுத்துள்ளார்... இதுதான் சர்ச்சையாக உருவெடுத்தள்ளது.
இதுகுறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தனது கண்டனத்தை தெரிவித்து, செய்தியாளர்களிடம் பேசியதாவது:
பாகல்கோட்டை மகாலிங்கபுரா புரசபை தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்து முடிந்தது.. இதில் காங்கிரஸ் கவுன்சிலர் சவிதா ஹுரகட்லி என்பவரும் போட்டியிட்டார்.
அவரை பாஜகவை சேர்ந்த சித்து சவதி எம்எல்ஏவும், அவரது ஆதரவாளர்களும் தாக்கி உள்ளனர்.. இது பாஜகவின் கலாசாரம்.. யாரை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற பழக்கத்தை அக்கட்சியினர் ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்... பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் தலைவர்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
வேறு வேறு சம்பவங்கள் என்றால், போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்கிறார்கள்... ஆனால் காங்கிரஸ் பெண் கவுன்சிலர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியபோது போலீசார் அங்குதான் இருந்திருக்கிறார்கள்.. அவர்களின் கண்முன்னேதான் இந்த சம்பவம் நடந்துள்ளது.. ஆனாலும், போலீசார் இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை.
போலீசார் என்னதான் நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பதை நாங்கள் பொறுத்திருந்து பார்க்கிறோம்... அந்த நடவடிக்கைக்கு பிறகு நாங்கள் இதுகுறித்து கருத்து தெரிவிக்கிறோம். இந்த விவகாரத்தை முதலமைச்சருக்கே விட்டுவிடுகிறேன்" என்று டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்'












Click it and Unblock the Notifications