குலை நடுங்க வைத்த அத்திப்பள்ளி பட்டாசு விபத்து.. காரணம் இதுதான்! ஆய்வு செய்த பின் சித்தராமையா பேட்டி
பெங்களூர்: அத்திப்பள்ளி பட்டாசு கடை விபத்து வழக்கு குற்ற புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டுள்ளது என்று தீ விபத்து நடைபெற்ற இடத்தில் ஆய்வு செய்த பிறகு கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
தமிழ்நாடு - கர்நாடக மாநில எல்லையில் அத்திப்பள்ளி அமைந்துள்ளது. பெங்களூர் புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா அத்திப்பள்ளியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான பட்டாசு கடைகள் இருக்கின்றன. இந்த பட்டாசு கடைகளில் தமிழகம், கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் பலரும் பட்டாசுகளை வாங்கி செல்கின்றனர். மொத்தமாகவும் சில்லறையாகவும் பட்டாசுகளை அதிகம் பேர் வாங்கி செல்வதை காண முடியும்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் அங்குள்ள பட்டாசு கடைகளில் பட்டாசுகள் விற்பனைக்கு குவிந்துள்ளன. வித விதமான பட்டாசுகளை பட்டாசு கடை உரிமையாளர்கள் கொள்முதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தான், நேற்று காலை நவீன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடைக்கு லாரிகளில் பட்டாசுகள் வந்து இறங்கின. சரக்கு வாகனங்களில் இருந்து பட்டாசுகளை இறக்கிய போது திடீரென தீ பிடித்ததாக சொல்லப்படுகிறது.
இதனால், பட்டாசுகள் வெடித்து சிதறின. மளமளவென தீ பட்டாசு கடை முழுவதும் பரவியது. இதனால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதற்குள் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது. பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு அதாவது நேற்று இரவு 7 மணி அளவில் பட்டாசு கடையில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
பின்னர் தீயணைப்பு வீரர்கள் பட்டாசு கடைக்குள் சென்று ஆய்வு செய்தனர். அப்போது தீயில் கருகி 14 பேர் இறந்து கிடந்தனர். தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த 13 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். தீ விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று அறிவித்தார். தீ விபத்து குறித்து அத்திப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பட்டாசு கடை உரிமையாளர் நவீன் உள்பட 7 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பட்டாசு கடை உரிமையாளரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, இன்று பட்டாசு விபத்து நடைபெற்ற இடத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியதாவது:- அத்திப்பள்ளி பட்டாசு கடை விபத்து வழக்கு குற்ற புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. பட்டாசு கடை உரிமையாளரின் கவனக்குறைவு, பாதுகாப்பின்மையால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் காயம் அடைந்தோருக்கான சிகிச்சை செல்வை கர்நாடக அரசு ஏற்கும்" என்றார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications