பெட்ஷீட் தராத அக்கா.. இரவெல்லாம் அழுத தங்கை.. பெங்களூரை அதிர வைத்த "போர்வை".. இப்படி கூடவா நடக்கும்?
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் நடந்த துயர சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை தந்து வருகிறது. இந்த சின்ன விஷயத்துக்கு இப்படியெல்லாம் முடிவெடுப்பார்களா? என்று இளம்பெண்ணின் உறவினர்கள் கதறி அழுது சொல்லி கொண்டிருக்கிறார்கள். என்ன நடந்தது?
பெங்களூரில் சாமராஜ் பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஷ்ரவ்யா.. இவருக்கு 19 வயதாகிறது.. அங்குள்ள கல்லூரி ஒன்றில் BBA 2ம் வருடம் படித்து வருகிறார்... இவருக்கு ஒரு உடன்பிறந்த அக்கா இருக்கிறார்.

அக்கா - தங்கைகள்: ஆனால், ஷ்ரவ்யா எப்போது பார்த்தாலும் அக்காவுடன் சண்டை போட்டுக் கொண்டே இருப்பாராம். அப்படித்தான், அக்டோபர் 18ம் தேதி இரவு தன்னுடைய அக்காவுடன் பெட்ஷீட் வேண்டும் என்று சண்டை போட்டிருக்கிறார்.. போர்வைக்காக அக்கா-தங்கைகள் சண்டை போடுவதை பார்த்த பெற்றோர், 2 பேரையுமே சமாதானமாக்கி தூங்க வைத்திருக்கிறார்கள்.
எனினும், ஷ்ரவ்யாவுக்கு தூக்கம் வரவில்லை.. பெட்ஷீட் பிரச்சனையை நினைத்தது நினைத்து மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது.. ஆனால், மறுநாள் காலை நீண்ட நேரமாகியும், ஷ்ரவ்யா ரூமை விட்டு வெளியே வரவில்லை.. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர், கதவை உடைத்து கொண்டு சென்று பார்த்தபோது, ஷ்ரவ்யா தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அலறினார்கள்.
பெட்ஷீட்: இதுகுறித்து தகவலறிந்த போலீசாரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஷ்ரவ்யாவின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பான விசாரணையையும் மேற்கொண்டு வருகிறார்கள்.. ஆனால், ஷ்ரவ்யாவின் பெற்றோர் இடையேயும் கருத்து வேற்றுமைகளால், தகராறுகள் வீட்டில் நடந்திருக்கிறது. இதனால், தான் மன உளைச்சலுக்கு ஆளாவதாக தன்னுடைய நண்பர்களிடம் ஷ்ரவ்யா அடிக்கடி சொல்லி வருத்தப்படுவாராம்.
மனவேதனை: ஏற்கனவே மனவேதனையில் இருந்த ஷ்ரவ்யா, தன்னுடைய அக்காவுடன் சண்டை போட்டதில் மேலும் மன உளைச்சலுடன் இரவெல்லாம் தவித்துவந்த நிலையில், திடீரென மன அழுத்தம் அதிகமாகி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிகிறது.
இப்படித்தான் ஒரு மாதத்திற்கு முன்பு இதேபோன்ற ஒரு சம்பவம் பெங்களூரில் நடந்தது.. 20 வயது மாணவர், அவருக்கு புதிய பைக் வாங்க தர மறுத்ததால் தற்கொலை செய்து கொண்டார். இந்த இளைஞரின் அப்பா இறந்துவிட்டார்.. அதனால், வீட்டு வேலை செய்து இளைஞரை படிக்க வைத்து வருகிறார் அவரது அம்மா.
பணக்கஷ்டம்: பணக்கஷ்டம் அதிகமாக இருப்பதால் உடனடியாக தன்னால் பைக் வாங்கி தர முடியவில்லை என்றும், சற்று பொறுமையாக இருக்கும்படியும் அந்த ஏழை தாய் சொல்லியிருக்கிறார்.. இதனால் விரக்தியடைந்த மகன், தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், ஒரு சிறிய பிரச்சனைக்காக இளம் பெண் விபரீத முடிவு எடுத்தது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுக்கெல்லாமா? தற்கொலை செய்து கொள்வது என்று இணையவாசிகள் தங்கள் ஆதங்கத்தை கொட்டி வருகிறார்கள். ஏற்கனவே தன்னுடைய குடும்பத்தில் நடக்கும் சண்டைகளை மன உளைச்சலில் இருந்த பெண்ணை, யாருமே கவனிக்காமல் விட்டுவிட்டார்களே? என்றும் இணையவாசிகள் கவலையை தெரிவித்து வருகிறார்கள்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications