6 மாதம்.. மாஜி காதலியை மிரட்டி 2 நண்பர்களோடு பலாத்காரம் செய்த நடன ஆசிரியர்! ஷாக் பின்னணி
பெங்களூர்: பெங்களூரில் சேர்ந்து எடுத்த போட்டோக்களை காட்டி மிரட்டி முன்னாள் காதலியை 6 மாதமாக நடன ஆசிரியர் ஒருவர் 2 நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்துள்ளார். தற்போது 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவத்தின் பின்னணி பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெங்களூர் கொடிகேஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் அன்டி ஜார்ஜ் (வயது 28). நடன ஆசிரியர். இவருக்கும், 23 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து இருவரும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் நலம்விசாரித்து கொண்டனர். இந்த நலம் விசாரிப்பு அவர்கள் இடையேயான உறவை வலுப்படுத்தியது. இதையடுத்து இருவரும் செல்போன் எண்களை பரிமாறி கொண்டு பேச தொடங்கினர்.
இருவரும் நல்ல நண்பர்களாக மாறினர். மேலும் அவர்கள் 2 பேரும் அடிக்கடி பெங்களூரில் சேர்ந்து சுற்ற தொடங்கினர். இருவருக்கும் இடையேயான இந்த நட்பு காதலாக மாறியது. இருவரும் பரஸ்பரம் காதலிக்க தொடங்கினர். இதை தொடர்ந்து அடிக்கடி அவர்கள் 2 பேரும் வெளியே சென்று செல்போனில் போட்டோக்கள் எடுத்துள்ளனர். இருவரும் சேர்ந்து இருந்து போட்டோக்களை எடுத்து கொண்டனர்.
இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு இருவரின் காதலிலும் பெரிய இடி இடித்தது. அன்டி ஜார்ஜ், இளம்பெண் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இருவர் இடையேயான காதல் முறிந்து போனது. அதன்பிறகு இருவரும் காதலை கைவிட்டு பிரிந்தனர். இதற்கிடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அன்டி ஜார்ஜ், தனது முன்னாள் காதலியாக இளம்பெண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது ‛‛காதலித்த சமயத்தில் எடுத்த போட்டோக்கள் என்னிடம் உள்ளது. எனது ஆசைக்கு இணங்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த போட்டோக்களை வெளியிட்டு விடுவேன்'' என மிரட்டல் விடுத்துள்ளார். அதோடு, ‛‛எனது ஆசைக்கு இணங்கிவிட்டால் போட்டோக்களை அழித்து விடுவேன்'' என தெரிவித்துள்ளார். இதனால் இளம்பெண் செய்வதறியாது திகைத்தார். மேலும் அன்டி ஜார்ஜ் ஆசைக்கு அவர் இணங்கவில்லை.

இருப்பினும் அன்டி ஜார்ஜ் விடவில்லை. தொடர்ந்து மிரட்டி இளம்பெண்ணை பலாத்காரம் செய்தார். அதோடு அன்டி ஜார்ஜ் தனது நண்பர்கள் சந்தோஷ் (28), சசிக்குமார் (30) ஆகியோரையும் சேர்த்து கொண்டு இளம்பெண்ணை வன்புணர்வு செய்துள்ளார். இந்த தொல்லை தொடர்ந்து வந்துள்ளது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான இளம்பெண் சம்பவம் குறித்து தனது தோழியிடம் தெரிவித்தார்.
அப்போது அவர், சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யும்படி அறிவுறுத்தினார். இதையடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண் சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்டி ஜார்ஜ், சந்தோஷ், சசிக்குமார் ஆகியோரை கைது செய்தனர். இதில் அன்டி ஜார்ஜுக்கு திருமணம் ஆகவில்லை.
மாறாக சந்தோஷ், சசிக்குமார் ஆகியோர் திருமணம் ஆனவர்கள் என்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து செல்போன், மடிக்கணினி, பென் டிரைவ் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications