Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bangalore: பெங்களூரில் நாளை முதல் ஹோட்டல்கள் இயங்காது.. சிலிண்டர் தட்டுப்பாட்டால் உரிமையாளர்கள் முடிவு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: சிலிண்டருக்கு தடுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பெங்களூர் முழுவதும் உள்ள ஹோட்டல்கள் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது ஹோட்டல் துறைக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளதாக பெங்களூர் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால், சாதாரண மக்கள், மூத்த குடிமக்கள், மானவர்கள் என ஹோட்டல்களை நம்பி உள்ள பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. 70 நாட்களுக்கு கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படாது என்று மத்திய அரசு கூறியது.

Bangalore Hotels To Stay Shut From Tuesday Due To Commercial Gas Supply Halt

பெங்களூரில் நாளை முதல் ஹோட்டல்கள் மூடப்படும்

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் மோதல் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு (எல்பிஜி) விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்து இருப்பதால் சர்வதெச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. கத்தார் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்து வரும் எல்பிஜி ஏற்றுமதி வாராந்திர அளவில் 30 சதவீதம் குறைந்துள்ளது.

இதனால், இந்தியாவிலும் சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான் கேஸ் சிலிண்டர் விநியோகம் இறுத்தப்பட்டுள்ளதால் பெங்களூரில் உள்ள ஹோட்டல்கள் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெங்களூர் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் கூறியிருப்பதாவது:-

சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது

சிலிண்டருக்கு தடுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பெங்களூர் முழுவதும் உள்ள ஹோட்டல்கள் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட உள்ளன. வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது ஹோட்டல் துறைக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது. 70 நாட்களுக்கு கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படாது என்று மத்திய அரசு கூறியது.

Bangalore Hotels To Stay Shut From Tuesday Due To Commercial Gas Supply Halt

ஆனால், திடீரென கியாஸ் சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது ஹோட்டல்கள் தொழிலுக்கு பெரும் அடியாக அமைந்துள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்றும் வணிக சிலிண்டர் விநியோக்த்தை மீண்டும் தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ஹோட்டல்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஐடி ஊழியர்கள் பாதிக்கப்படுவர்

சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால், சாதாரண மக்கள், மூத்த குடிமக்கள், மானவர்கள் என ஹோட்டல்களை நம்பி உள்ள பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஐடி ஊழியர்கள் அதிகம் பணியாற்றும் பெங்களூரில் வெளி மாநிலத்தை சேர்ந்த ஏராளான டெக் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் பலரும் ஹோட்டல் உணவையே நம்பியுள்ள நிலையில், பெங்களூர் ஹோட்டல் சங்கம் எடுத்த முடிவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

எரிபொருள் விநியோகம் பாதிப்பு

ஈரான்-அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பிரச்சினை இந்தியாவிலும் எதிரொலித்தது.

கடந்த சனிக்கிழமை எரிவாயு சிலிண்டர் விலை 60 ரூபாய் உயர்த்தப்பட்டது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 50 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், நேற்று முன் தினம் திடீரென எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+