Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெங்களூரில் நேற்று எதிர்க்கட்சிகள் கூட்டம்! இன்று குண்டுவெடிப்பு சதி.. கைதான 5 பேரும் பயங்கரவாதிகளா?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியதாக 5 பேரை பெங்களூர் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நேற்றைய தினம் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்த குண்டுவெடிப்பு சதி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு: பெங்களூர் நகரில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்த சதி திட்டம் தீட்டியதாக சையத் கஹெல், உமர், ஜானித், முதாசிர், ஜாஹித் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Bangalore police arrest 5 members in suspecting terrorist

கைது செய்யப்பட்ட 5 பேரும் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுகிறது. இவர்கள் 5 பேரும் 2017ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அங்கு அவர்களுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கலாம் என விசாரணையில் தகவல் கிடைத்தது.

கைதான 5 பேரிடம் இருந்து வெடிப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பெங்களூரில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியிருக்கலாம் என தெரிகிறது. வேறு எங்கெல்லாம் இவர்களது டீம் இருக்கிறார்கள் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஏற்கெனவே வேறு எங்காவது குண்டு வெடிப்பை நிகழ்த்த சதி செய்துள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+