பெங்களூரில் வருடத்துக்கு 86,000 டன் கம்ப்யூட்டர், செல்போன்கள் தெருவில் விழுகிறது: ஆய்வில் தகவல்
பெங்களூர்: பெங்களூரில் ஆண்டுக்கு சுமார் 86 ஆயிரத்து 118 டன் இ-குப்பைகள் குவிவதாக கர்நாடக சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் கொள்கை வகுப்பு இன்ஸ்ட்டிடியூட் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
நாட்டின் தகவல் தொழில்நுட்ப தலைநகர் என்று அழைக்கப்படுவது பெங்களூர். அதிகப்படியான ஐடி நிறுவனங்கள் இந்த நகரில் குவிந்துள்ளதால் நவீன தகவல் தொடர்பு சாதனைகளை இங்குள்ள மக்கள் அதிக அளவுக்கு பயன்படுத்துகிறார்கள்.

இவைதான் இ-வேஸ்ட்
கம்ப்யூட்டர், லேப்டாப், ஸ்மார்ட் போன்கள், ஒலி பெருக்கிகள், மைக்ரோவேவ் ஓவன்கள், ஃபிரிட்ஜ்கள் கழிவாக தூக்கி எறியப்படும்போது அவை எலக்ட்ரானிக் குப்பைகள், அல்லது சுருக்கமாக இ-வேஸ்ட் என்று அழைக்கப்படுகின்றன.

86,118 டன் குப்பை குவிகிறது
அந்த வகையில் பெங்களூரில் ஆண்டுக்கு சராசரியாக 86 ஆயிரத்து 118 டன் இ-குப்பைகள் குவிகின்றனவாம். கர்நாடக சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் கொள்கை வகுப்பு இன்ஸ்ட்டிடியூட் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

மானிட்டர், கீபோர்டு, செல்போன் அதிகம்
குப்பைகளில் பெரும்பாலானவை கம்ப்யூட்டர் மானிட்டர்கள், கீபோர்டுகள், செல்போன்கள் ஆகியவையாகும். இவற்றை மறு சுழற்சிக்கு உட்படுத்தினால் அவை மண்ணில் மட்காமல் தப்பிக்கும். இதனால் மணலுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாது.

34 நிறுவனங்களுக்கு அங்கீகாரம்
பெங்களூரை பொறுத்தளவில் மறுசுழற்சி செய்ய முறையாக அனுமதி பெற்ற நிறுவனங்கள் வெறும் 34 மட்டுமே. அதிலும், 14 நிறுவனங்கள் மட்டுமே, ஆண்டு அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளன. அங்கீகரிக்கப்பட்ட மறுசுழற்சி நிறுவனங்களால் மொத்த குப்பையில் 10 சதவீதத்தை மட்டுமே மறுசுழற்சி செய்ய முடிகிறது.

அங்கீகாரம் இல்லா நிறுவனங்கள்
பெரும்பாலான குப்பைகள், அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களால் மறுசுழற்சிக்கு உள்ளாக்கப்படுகின்றன. இதுபோன்ற நிறுவனங்கள் குப்பைகளுக்கு அதிக விலை கொடுப்பதால் குப்பை சேகரிப்பாளர்கள், அங்கீகாரம் பெறாத நிறுவனங்களிடமே குப்பைகளை அளிக்கின்றனர். இவர்கள் சுற்றுச்சூழல் விதிமுறைகளை மதித்து மறுசுழற்சி செய்யாததால் சுற்றுச்சூழல் மாசடைவதாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications