பஸ்ஸில் மகளிருக்கு இலவசம்.. பெங்களூருவில் அடியோடு மாறிய நிலைமை.. ஆட்டோ ஓட்டுநர் கண்ணீர் வீடியோ
பெங்களூரு: கர்நாடகாவில் அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. பலரும் அரசு பேருந்துகளில் மட்டுமே பயணிப்பதால் வாடகை வாகன ஓட்டுநர்களும், தனியார் பேருந்து உரிமையாளர்களும் வருமானம் இன்றி தவிக்கிறார்கள்.
தமிழ்நாட்டை போல் கர்நாடகாவிலும், அரசு பேருந்துகளில் கட்டணம் மகளிருக்கு இல்லை என்பதால் இந்த இருமாநிலங்களிலுமே தனியார் பேருந்துகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை பணம் கொடுத்து பயணித்த மக்கள், இலவசமாக பயணிப்பதால், வேலைக்கு செல்லவும், பொது இடங்களுக்கு செல்லவும் அரசு பேருந்தில் மட்டுமே செல்வதால் தங்கள் பணத்தை பெரிய அளவில் மிச்சம் பிடித்துள்ளனர். அதேநேரம் தனியார் வாடகை வாகன ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் இந்த புதிய மாற்றத்தால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதன் காரணமாக காங்கிரஸ் சார்பில் முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் கடந்த ஜூன் 13-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
இதனால் மக்கள் பெரும்பாலானோர் அரசு பேருந்துகளில் மட்டுமே ஏறுகிறார்கள். குறிப்பாக பெண்கள் அரசு பேருந்துகளில் காத்திருந்து ஏறுகிறார்கள். பெண்கள் பலர் வெளியில் போவதும் அதிகரித்துள்ளது. சுற்றுலா தலங்களுக்கும், ஆன்மீக தலங்களுக்கும் செல்லும் பெண்களின் எண்ணிக்கை பெரிய அளவில் கர்நாடகாவில் அதிகரித்துள்ளது.
பெங்களூரு நகரில் மக்கள் பலர் அரசு பேருந்துகளில் ஏறுவதால், ஆட்டோ, வாடகை டாக்சி, வேன் ஆகியவற்றில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை கடுமையாக சரிவடைந்துள்ளது. பெங்களுரூவில் நிலைமை இப்படி என்றால், மற்ற மாவட்டங்களில் தனியார் பேருந்துகளில் பெண்கள் பயணிப்பதையே தவிர்த்து வருகிறார்கள். இதனால் தனியார் பேருந்துகளில் கூட்டம் கணிசமாக குறைந்துள்ளது. ஓலா, ஊபர் போன்ற செயலிகளைப் பயன்படுத்தி பயணம் செய்வது பெங்களூருவில் மட்டுமே கணிசமாக உள்ளது. மற்ற மாவட்டங்களில் பெரிய அளவில் குறைந்துள்ளது.
இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கண்ணீர் மல்க பேசும் வீடியோவே இதற்கு சாட்சியாக பார்க்கப்படுகிறது. அவர் அந்த வீடியோவில், நான் காலை 8 மணியில் இருந்து பிற்பகல் 1 மணிவரை ஆட்டோ ஓட்டி இருக்கிறேன். வெறும் 40 ரூபாய் மட்டுமே வருமானம் வந்துள்ளது என்று கண்ணீருடன் பேசுகிறார்.
இந்த வீடியோவை டிரைவர்கள் ஏராளமானோர் பகிர்ந்து, இலவச பயண திட்டத்தால் ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக அரசை விமர்சித்துள்ளனர்.அதேநேரம் பொதுமக்களோ அரசின் திட்டத்தை வெகுவாக பாராட்டி உள்ளனர்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications