Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொடையில் கை வைத்து! ஆளில்லாத ரோட்டில் நிறுத்தி.. நள்ளிரவில் டாக்சியில் பெங்களூர் பெண்ணுக்கு துயரம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் வசிக்கும் பெண் ஒருவர் இரவு நேரத்தில் டாக்சி பயணத்தின்போது தனக்கு நேர்ந்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அந்தப் பெண் இரவு 11 மணியளவில் விமான நிலையத்திலிருந்து வீட்டிற்குத் திரும்பும்போது டாக்ஸி டிரைவர் நடந்து கொண்ட விதம் மிகவும் பாதுகாப்பற்றதாக உணர வைத்ததாகக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவரது போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

இன்னுமே இரவு நேரங்களில் பெண்களால் தைரியமாக வெளியே சென்றுவர முடியாத சூழலே நிலவுகிறது. இரவு நேரங்களில் பெண்களுக்குத் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அப்படித் தான் பெங்களூர் பெண் ஒருவருக்கு மிக மோசமான சம்பவம் நடந்துள்ளது.

Bangalore Woman s Harrowing cab Ride Recounts Late-Night Harassment by Driver

பெங்களூர் பாதுகாப்பான நகரமா

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "பெங்களூர் பாதுகாப்பானது என்று சொன்னது யார்? நேற்று இரவு விமான நிலையத்திலிருந்து திரும்பும்போது டாக்ஸியில் எனக்கு நடந்த சம்பவம் மிகவும் அச்சுறுத்துவதாக இருந்தது" என்று கூறி தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அவரது போஸ்ட் இப்போது இணையத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

அதாவது பயணம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே டிரைவர் அந்தப் பெண்ணை முறைத்துப் பார்க்கத் தொடங்கினாராம். கன்னடம் தெரியுமா எனக் கேட்ட டிரைவர் பிறகு, யூடியூப்பில் மிக சத்தமாகப் பாடல்களைப் போட்டுவிட்டாராம். தொடைகளைத் தட்டிக் கொண்டே சத்தமாகப் பாடவும் தொடங்கியுள்ளார். பாடல் சத்தத்தைக் குறைக்கச் சொன்னபோதும் அவர் கேட்கவே இல்லை.

புகை பிடித்தார்

ஒரு கட்டத்தில் வண்டியை ஓட்டிக் கொண்டே புகைபிடிக்கவும் தொடங்கிவிட்டாராம். இரவு நேரத்தில் இதுபோல நடந்து கொண்டது தன்னை அச்சுறுத்துவதாக இருந்ததாகவும் இதனால் தனது மூன்று நண்பர்களிடம் போன் செய்து, பயணம் முடியும் வரை அவர்களுடன் பேசிக் கொண்டே சென்றதாகவும் அந்தப் பெண் கூறினார். மேலும், லொகேஷனை பகிர்ந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "பெங்களூர் பாதுகாப்பானது என்று யார் சொன்னது? நேற்று இரவு 11 மணியளவில் விமான நிலையத்திலிருந்து டாக்ஸி மூலம் வீடு திரும்பினேன். அப்போது எனக்கு மிகவும் பயங்கரமான அனுபவம் ஏற்பட்டது. டாக்ஸி டிரைவர் அச்சுறுத்தும் வகையில் என்னை முறைத்துக் கொண்டே இருந்தார்.

முறைத்துப் பார்த்தார்

எனக்குக் கன்னடம் தெரியுமா என்று கேட்ட அவர் பிறகு திடீரென யூடியூபில் அதீத சத்தத்தில் பாடல்களைப் போடத் தொடங்கினார். சத்தமாக பாட தொடங்கிய அவர், தொடைகளைத் தட்டிக் கொண்டே இருந்தார். நான் சத்தத்தைக் குறைக்கச் சொன்னபோது, ​​அந்த நபர் மீண்டும் முறைத்துப் பார்த்தார். கொஞ்சம் மட்டுமே சத்தத்தைக் குறைத்தார்.

ஆள் இல்லாத ரோட்டில் டீ

திடீரென்று டிரைவர் புகைபிடிக்கத் தொடங்கினார். நான் மீண்டும் புகைபிடிக்க வேண்டாம் எனச் சொல்ல வேண்டி இருந்தது. நான் தனியாக இருந்தேன்.. இரவு நேரமாகிவிட்டது.. இதனால் எனது 3 நண்பர்களுக்குக் கால் மற்றும் மெசேஜ் அனுப்பி, லொகேஷனையும் பகிர்ந்து கொண்டேன். பிறகு எங்கோ ஆள் நடமாட்டம் இல்லாத ரோட்டில் வண்டியை நிறுத்திவிட்டு மேடம் டீ குடித்துவிட்டு வருகிறேன் என்றார். நான் பையா ரோட்டில் யாருமே இல்லையே எனச் சொன்னபோதிலும் அவர் அதைக் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டார்.

ஷாக் சம்பவம்

ஒரு 10 நிமிடங்களுக்குப் பிறகு திரும்பி வந்து வண்டியை எடுத்தார். ஆனால், அதன் பிறகு 5 நிமிடங்களுக்கு ஒருமுறை என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தார். நான் உண்மையாகவே பயந்துவிட்டேன். பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். அதிர்ஷ்டவசமாக நான் பத்திரமாக வீடு திரும்பினேன். ஆனால், டாக்ஸி டிரைவர்கள் பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைச் சம்பந்தப்பட்ட டாக்ஸி நிறுவனங்கள் தங்கள் டிரைவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்" என்றார்.

இந்தச் சம்பவம் இணையத்தில் டிரெண்டானது. பலரும் இது குறித்துப் பல விதக் கருத்துகளைத் தெரிவித்தனர். இதையடுத்து பெங்களூர் போக்குவரத்து போலீசாரும் இது குறித்து, "உங்கள் மொபைல் நம்பரை எங்களுக்கு மெசேஜ் செய்யுங்கள். இந்தச் சம்பவம் குறித்து விசாரிப்போம்" என்று பதிவிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+