மாயமான நெக்லஸ்.. பக்காவாக திருடி.. அபத்தமாக சிக்கிய பெங்களூர் வேலைக்கார அக்கா
பெங்களூர்: திருட்டு, கொலை உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் சம்மந்தப்பட்டவர்கள் ஏதாவது தடயத்தை விட்டு செல்வார்கள் என்று சொல்லப்படும். ஒருவேளை தடயமே இல்லாமல் குற்றம் செய்தாலும், பிற்காலத்தில் அவர்கள் ஏதாவது ஒரு வகையில் சிக்குவார்கள். பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது போலத்தான் பெங்ளூரில் அபார்ட்மென்ட் வீட்டில் கைவரிசை காட்டி, சில மாதங்களில் அபத்தமான செயலால் சிக்கியுள்ளார்.
கர்நாடக மாநிலம், பெங்களூர் மரதஹல்லியில் ஒரு அபார்ட்மென்ட் உள்ளது. அந்த அபார்ட்மென்டில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஸ்ருதிகா ப்ரிஜேஷ் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. கடந்த மார்ச் மாதம் அவர்கள் வீட்டில் இருந்த 65 கிராம் தங்க நகைகள் திருடப்பட்டன. 1 தங்க நெக்லஸ், 2 வளையல், 2 மோதிரம், 2 கம்மல், ஒரு செயின் ஆகியவை திருடப்பட்டிருந்தன. இதுகுறித்து ஸ்ருதிகாவின் கணவர் ப்ரிஜேஷ் தாமி காவல்நிலையத்தில் புகாரளித்திருந்தார்.

அதனடிப்படையில் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அவர்களின் வீட்டில் வேலைக்கார பெண் ரேணுகா உள்ளிட்ட சிலரிடமும் விசாரித்தனர். ஆனால் வழக்கில் எந்த முன்னேற்றமும் நடக்கவில்லை. இதனால் காவல்துறையும் தடுமாறிக் கொண்டிருந்தது. நகை மாயமாகி நான்கு மாதங்களான நிலையில், செல்போன் மூலம் ஸ்ருதிகாவுக்கு ஒளி கிடைத்துள்ளது. ஸ்ருதிகா எதேச்சையாக ரேணுகாவின் வாட்ஸ் அப் டிபியை பார்த்துள்ளார். அப்போது ரேணுகாவின் கழுத்தில் ஸ்ருதிகாவின் மாயமான நெக்லஸ் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதுகுறித்து அவர்கள் போலீஸை அலெர்ட் செய்யவே, ரேணுகாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதுகுறித்து, ஸ்ருதிகா கூறுகையில், "அதை பார்த்தவுடனே அது என் நெக்லஸ் என்று தெரிந்துவிட்டது. என் அம்மாவும் அதை உறுதிபடுத்தினார். காவல்துறை விசாரணையில் ரேணுகாவும் எங்கள் வீட்டில் திருடிய நகை என்பதை ஒப்புக் கொண்டார். கடந்த தீபாவளி பண்டிகைக்கு பிறகு அந்த நெக்லஸை நான் பயன்படுத்தவில்லை. என் நகையை ரேணுகா கவனித்துள்ளார். எங்கள் வீட்டில் 4 பணியாட்கள் இருந்தனர்.
ரேணுகா மட்டும் வேலையை விட்டு நின்றார். அப்போதே எனக்கு சந்தேகம் வந்தது. அவர் இதேபோல பல பிளாட்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதனால் அவர்களின் நடவடிக்கையை தொடர்ந்து கண்காணித்து வந்தோம். கடந்த மாதம் அவர்கள் ஊர் திருவிழாவுக்காக ரேணுகா கணவருடன் சென்றுள்ளார். அப்போது செல்ஃபி எடுத்துள்ளார். திருடி மாதக்கணக்கில் ஆகிவிட்டது என்பதால் எல்லோரும் மறந்திருப்பார்கள் என்று நினைத்து அதை டிபியாக வைத்து சிக்கிவிட்டார்.” என்றார்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications