பெங்களூரு வீரபத்திரா நகர் பேருந்து நிலையத்தில் பயங்கர தீ விபத்து.. கொளுந்து விட்டு எரியும் பஸ்கள்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரு வீரபத்திரா நகரில் உள்ள பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்துகள் தீப்பிடித்து எரிந்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த பேருந்துகள் பயங்கரமாக புகை மற்றும் நெருப்புடன் கொழுந்து விட்டு எரியும் காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.

பெங்களூரு வீரபத்ரா நகர் பேருந்து நிலையத்தை ஒட்டிய டிப்போவில் 40க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி கர்நாடகா ஊடகங்கள் வெளியிட்ட தகவலின் படி, அங்கு நிறுத்தப்பட்டிருந்த குறைந்தது நான்கு தனியார் பேருந்துகள் முழுமையாக எரிந்துள்ளன.

bengalore : Massive fire broke out in Veerabhadra Nagar, about 10 buses burnt

தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இரண்டு தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். முதற்கட்ட தகவல்களின்படி, தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 10க்கும் மேற்பட்ட பேருந்துகள் தீயில் சிக்கி எரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடங்களில் செய்தி நிறுவனங்களில் வெளியிடப்பட்டுள்ளன. பெங்களூரு வீரபத்திரா நகர் பேருந்து நிலையத்தை ஒட்டிய டிப்போவில் இருந்து கரும் புகை மேலே விண்ணை முட்டும் அளவிற்கு எழுவதும், பேருந்துகள் தீயில் பயங்கரமாக எரிந்து கொண்டிருப்பதும் வீடியோ காட்சிகளில் உள்ளன. இந்த விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை.. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+