பெங்களூர் நெரிசல்.. அடுத்தடுத்து உருளும் தலைகள்! அடித்து ஆடும் சித்தராமையா! பிற மாநிலங்களுக்கு பாடம்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: நேற்று முன்தினம் புதன்கிழமை, பெங்களூர் சின்னசுவாமி ஸ்டேடியத்தில் RCB (Royal Challengers Bengaluru) IPL வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, கர்நாடக அரசு, காவல்துறை அதிகாரிகள் மட்டுமின்றி பல தரப்பினர் மீதும் அடுத்தடுத்து கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

பணி இடை நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள்
மொத்தம் 5 பேர் உடனடி பணிநீக்கம் செய்யப்பட்டனர்:
- B. தயாநந்தா - பெங்களூரு மாநகர காவல் ஆணையர்
- விகாஷ் குமார் விகாஷ் - மேற்கு பிரிவு கூடுதல் காவல் ஆணையர்
- H.T. சேகர் - மத்திய பிரிவு துணை காவல் ஆணையர் (DCP, Central Division)
- C. பாலகிருஷ்ணா - கப்பன் பார்க் சரக உதவி காவல் ஆணையர் (ACP, Cubbon Park)
- A.K. கிரிஷ் - கப்பன் பார்க் காவல் ஆய்வாளர் (Inspector of Police, Cubbon Park)
கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள் (4 பேர்):
- நிகில் சோசலே - RCB மார்க்கெட்டிங் தலைமை அதிகாரி
- சுனில் மேத்யூ - DNA ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் துணை தலைவர்
- கிரண் - DNA ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம்
- சுமந்த் - DNA ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம்
FIR மற்றும் விசாரணை
FIR பதிவு:
- RCB (IPL பிராஞ்சைஸ்),
- DNA ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம்,
- கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (KSCA) ஆகிய அமைப்புகள் மீது பல பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது
- சிறப்பு விசாரணை குழு (CID) அமைக்கப்பட்டுள்ளது.
- KSCA அதிகாரிகள் (Secretary Shankar, Treasurer Jayram) மீதும் போலீசார் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்; அவர்கள் தலைமறைவாக உள்ளனர்
- அவ்வளவு ஏன், முதல்வர் சித்தராமையாவின் அரசியல் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதே அளவுக்கு தீவிரமாக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், சென்னை ஏர்ஷோவில் நடைபெற்ற விபத்துக்கு காரணமானவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications