Chezhiyan: தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் செழியன் மறைந்துவிட்டாரே.. இயக்குனர் வசந்தபாலன் உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவிற்கு இது போதாத காலம் என்று தான் சொல்ல வேண்டும். சமீபத்தில் தான் இயக்குனர் பாரதிராஜாவின் மறைவு ஒட்டுமொத்தத்துறை உலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது. அதை தொடர்ந்து பாக்யராஜும் அடுத்த சில வாரங்களில் இறந்துவிட்டார். இந்த சோகம் அடங்குவதற்குள் இப்போது தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான செழியனின் (cinematographer Chezhiyan) மறைவு திரை துறையை மீண்டும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் செழியன் ஆரம்பகாலம்

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த செழியனுக்கு சின்ன வயதிலிருந்து புகைப்பட கலையில் அதிக ஆர்வம் இருந்திருக்கிறது. அதன் காரணமாகவே அவர் சினிமா உலகிற்கு அடி எடுத்து வைத்திருக்கிறார். ஒளிப்பதிவின் ஜாம்பவான் பி சி எஸ் ஸ்ரீ ராமரிடம் உதவியாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் பிறகு தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கினார்.

ஒரு சில திரைப்படங்களில் ஒளிப்பதிவு காட்சிகளை பார்த்ததுமே இது யாராக இருக்கும் என்று யோசிக்கத் தோன்றும். அந்த அளவிற்கு தன்னுடைய ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான மற்றும் மக்களுடன் எளிதாக கனெக்டாகுற மாதிரி ஒரு தனி அடையாளத்தை செழியன் உருவாக்கி இருந்தார். அதிலும் 2007 ஆம் ஆண்டு வெளியான கல்லூரி படத்தின் மூலமாகத்தான் இவர் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார்.

Cinematographer Chezhiyan Director Vasanthapalan Director

ஒளிப்பதிவாளர் செழியன் திரைப்படங்கள்

அதற்கு பிறகு ரெட்டை சுழி, மகிழ்ச்சி, தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் உள்ளிட்ட பல தரமான படங்களுக்கு தனது கேமரா மொழியால் உயிர் கொடுத்தார். இயற்கை ஒளியை அழகாக பயன்படுத்தி இவருடைய காட்சி அமைப்பு பலருடைய மனதை கவர்ந்தது. ஒளிப்பதிவாளராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் தன்னுடைய திறமையை நிரூபித்தவர்.

இயக்குனராகவும் வெற்றி

செழியன் 2017 இல் வெளியான டூ லைட் திரைப்படத்தை இயக்கி அதற்கான தேசிய விருதையும் பெற்றிருந்தார். அந்த படம் கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியாவின் சிறந்த படமாக செலக்ட் ஆகி உலக அளவில் கவனம் பெற்றது. சினிமா மீது அவருக்கு இருந்த காதலை பற்றி ஒரு பேட்டியில் பேசும்போது, நான் என்னுடைய காதலை விரும்பி தேர்ந்தெடுத்து இப்போது நான் ரசித்து ஈடுபடக்கூடிய ஒன்றாகவே ஒளிப்பதிவு இருக்கிறது என்று சொல்லி இருந்தார்.

Cinematographer Chezhiyan Director Vasanthapalan Director

ஒளிப்பதிவாளர் செழியன் இறப்பு

அதோடு உலக சினிமா பற்றி அவர் எழுதிய கட்டுரைகள் புத்தகமாகவும் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் தான் கடந்த சில நாட்களாக சென்னை தரமணியில் உள்ள புற்றுநோய் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்த செழியன் இன்று ஜூலை 10ஆம் தேதி காலை உயிரிழந்திருக்கிறார். இந்த செய்தி வெளியானதும் திரை உலகினர், ரசிகர்கள் என பலரும் தங்களுடைய வருத்தங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இயக்குனர் வசந்தபாலன் பதிவு

செழியன் இறப்பு குறித்து வசந்தபாலன் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், "ஒளிப்பதிவாளர் செழியன் மரண செய்தி பெரும் அதிர்ச்சி தருகிறது. ஏன் செழியன்? என்ன செழியன்? ஏன் இப்படி? ஏன் இத்தனை சீக்கிரம்? என்ன அவசரமோ புரியல.." என்று தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+