Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மண்டை ஓடு சிதையும் அளவுக்கு ரவுடியை தாக்கி கொலை.. பெங்களூர் பாஜக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் நகரின் மத்திய பகுதியான அல்சூர் ஏரியாவில் பிரபல ரவுடி ஒருவர், சரமாரியாக வெட்டியும், மண்டை ஓடு சிதையும் அளவுக்கு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டுள்ளார். ரவுடியின் தாய் அளித்த புகாரின் பேரில், கே.ஆர்.புரம் தொகுதி பாஜக எம்எல்ஏ பைரத்தி பசவராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொலையானவர் யார்?

கொலையானவர் சிவ பிரகாஷ், பொதுவாக பிக்குலு சிவா என்று அறியப்படுபவர். சிவஞ்செட்டி கார்டன்ஸ், மினி அவென்யூ சாலையில் வசித்து வந்த இவர், பாரதி நகர் காவல் நிலையத்தின் ரவுடி பட்டியலில் இடம் பெற்றிருந்தார். இவர் மீது ஏற்கனவே 11 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2006 ஆம் ஆண்டிலேயே இவர் மீது ரவுடி ஷீட் திறக்கப்பட்டு, சமீபத்தில் கூட ரவுடிகள் அணிவகுப்பில் கலந்து கொண்டுள்ளார்.

bangalore crime

கொடூரமான தாக்குதல்!

நேற்று இரவு 8.10 மணியளவில், தனது வீட்டிலிருந்து சில மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு ஹோட்டல் முன்பு சிவா தாக்கப்பட்டார். தனது ஓட்டுநர் இம்ரான் கான் மற்றும் நண்பர் லோகேஷ் ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தபோது, தாக்குதல் நடத்தியவர்கள் திடீரென எஸ்யூவி கார் மற்றும் பைக்குகளில் வந்தனர். இந்த தாக்குதல் "மிகவும் கொடூரமானது" என்றும், சிவாவின் "மண்டை ஓடு துண்டு துண்டாக உடைக்கப்பட்டு", அவரது முகம் "முற்றிலும் சிதைக்கப்பட்டு விட்டது" என்றும் ஒரு மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார். இதனால், சம்பவ இடத்திலேயே சிவா உயிரிழந்துள்ளார். ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த மக்கள் அலறி அடித்து ஓடியதாக கூறப்படுகிறது. கொலை தொடர்பாக ஐந்து பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

எம்.எல்.ஏ. மீது தாயாரின் பகீர் புகார்!

சிவாவின் 68 வயது தாயார் விஜயலட்சுமி அளித்த வாக்குமூலத்தில், தனது மகனின் கொலைக்கு, கிழக்கு பெங்களூரு, கித்தகனூர் கிராமத்தில் உள்ள ஒரு சொத்து தகராறுதான் காரணம் என்று தெரிவித்துள்ளார். இந்த சொத்து தகராறில், ஜெகதீஷ், கிரண், விமல், அனில் மற்றும் சிலருக்கும், எம்.எல்.ஏ. பைரதி பசவராஜ் உள்ளிட்டோருக்கும் தொடர்பு இருப்பதாகவும், இவர்கள் தனது மகன் கொலைக்கு உடந்தையாக இருந்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

விஜயலட்சுமியின் வாக்குமூலத்தின்படி, சிவா 2023 இல் ஒரு சொத்தை வாங்கி, அதன் பவர் ஆவணத்தை வைத்திருந்தார். அந்த இடத்தில் ஒரு கொட்டகை அமைத்து இரண்டு பெண்களை காவலாளிகளாக நியமித்திருந்தார். ஆனால் பிப்ரவரி 11 ஆம் தேதி, ஜெகதீஷ் மற்றும் கிரண் உள்ளிட்ட ஒரு கும்பல், அந்தப் பெண்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி, ஜெகதீஷ் பெயருக்கு அதிகார ஆவணத்தை மாற்றும்படி கேட்டதாகக் கூறப்படுகிறது. ஜெகதீஷ் மிரட்டியதால், சிவா தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக குடும்பத்தினரிடம் தெரிவித்திருந்தார். போலீசில் புகார் அளித்தும் மிரட்டல்கள் வந்துகொண்டே இருந்துள்ளன.

bangalore crime

சம்பவம் நடந்த இரவு

ஜூலை 13 ஆம் தேதி சிவா தனது நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளப் போவதாகவும் அன்றிரவு வீடு திரும்ப மாட்டேன் என்றும் தனது குடும்பத்தினரிடம் கூறியிருக்கிறார். ஜூலை 15 ஆம் தேதி மதியம் வீடு திரும்பி மதிய உணவு சாப்பிட்டுவிட்டு தூங்கியுள்ளார். பின்னர் இரவு 8 மணிக்கு பிறகு இம்ரான் மற்றும் லோகேஷ் உடன் ஹோட்டல் அருகே பேசிக்கொண்டிருந்தபோது இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. பால்கனியில் இருந்த விஜயலட்சுமி, சத்தம் கேட்டு வெளியே ஓடிச் சென்று பார்த்தபோது, எட்டு முதல் பத்து பேர் சிவாவை கொடூரமான ஆயுதங்களால் தாக்குவதைக் கண்டுள்ளார். தடுக்க முயன்ற இம்ரானையும் அவர்கள் தாக்கியுள்ளனர். லோகேஷ் தனது தொலைபேசியில் தாக்குதலைப் படம் பிடித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் வாகனங்களில் தப்பிச் சென்றுள்ளனர்.

எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு

பாரதி நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், எம்.எல்.ஏ. பைரதி பசவராஜ் 5வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் 103 (கொலைக்கான தண்டனை) மற்றும் 190 (சட்டவிரோதக் கூட்டத்தால் பொதுவான நோக்கத்தை நிறைவேற்றுவதில் குற்றம்) பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மண்டல இணை போலீஸ் கமிஷனர் பி. ரமேஷ் கூறுகையில், "கொலை செய்தவர்கள் யார் என்று கண்டுபிடித்த பிறகுதான் கொலைக்கான காரணம் தெரியவரும்" என்றார். போலீசார் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து, சந்தேக நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எம்.எல்.ஏ. மறுப்பு

எம்.எல்.ஏ. பைரதி பசவராஜ் ஊடகங்களிடம் பேசுகையில், "எனக்கு இந்த சம்பவம் பற்றி எதுவும் தெரியாது. பிக்குலு சிவா யார் என்றோ, சொத்து எங்கிருக்கிறது என்றோ எந்த விவரமும் எனக்குத் தெரியாது. எந்த காரணமும் இல்லாமல் எனது பெயரை முதல் தகவல் அறிக்கையில் சேர்த்துள்ளனர். இது எனக்கு ஊடகங்கள் மூலம் தான் தெரியும். இது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. இதற்கு எதிராக சட்டப்படி போராடுவேன். மேலும் இதுகுறித்து உள்துறை அமைச்சரிடம் விளக்கம் அளிப்பேன். எனக்கு இதில் எந்த பங்கும் இல்லை. இறந்தவர் பல நாட்களுக்கு முன்பு போலீசில் புகார் அளித்ததாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. அது பற்றி ஏன் யாரும் எனக்கு தெரிவிக்கவில்லை அல்லது என்னிடம் விளக்கம் கேட்கவில்லை. இது அரசியல் சதியா அல்லது வேறு காரணமா என்று எனக்குத் தெரியவில்லை. போலீசார் விசாரணைக்கு அழைத்தால் ஆஜராக தயார்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+