கல்லூரி காதலனுடன் கள்ளக்காதல் + ரூ.1000 கோடி சொத்து.. மகளையே கொன்று நாடகமாடிய பெங்களூர் பெண்
பெங்களூர்: ரூ.1,000 கோடி சொத்து வைத்துள்ள தனது கல்லூரி காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக 6 வயது மகளை கொன்று பிரியாணி சாப்பிட்டு இறந்ததாக பெண் ஒருவர் நாடகமாடிய சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்த நிலையில் இறந்த சிறுமியின் தாய் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வரும் சூழலில் இந்த சம்பவம் குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகா மாநிலம் தாவணகெரேவில் தனியார் பள்ளி நடத்தி வருபவர் பிரவீன் பசப்பா. இவருக்கும், பிரியங்கா என்பவருக்கும் கடந்த 2007 ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி திருமணம் நடந்தது. பிரியங்கா வழக்கறிஞர் ஆவார். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு 17 வயது ஆகிறது. இளைய மகள் பெயர் வெண்ணிலா. இவருக்கு 6 வயது ஆகிறது.

இந்நிலையில் தான் கடந்த 2025ம் ஆண்டு சொத்து தொடர்பான பிரச்சனையை தீர்க்க பிரியங்கா பெங்களூர் வந்தார். அப்போது பெங்களூரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் மோகன் (வயது 40) என்பவரை சந்தித்தார் பிரியங்கா. இவர்கள் 2 பேரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். அதோடு இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
ஆனால் அவர்களின் காதல் திருமணத்தில் முடியவில்லை. பிரியங்கா, பிரவீன் பசப்பாவை திருமணம் செய்து கொண்டார். நீண்ட காலத்துக்கு பிறகு பிரியங்காவும், மோகனும் சந்தித்து கொண்ட நிலையில் இருவரும் செல்போன் எண்களை பரிமாறி கொண்டு பேச தொடங்கினர். அப்போது மோகன், தான் ரியல் எஸ்டேட் தொழிலில் கொடிகட்டி பறக்கிறேன். எனக்கு ரூ.1,000 கோடி சொத்து இருப்பதாக கூறியுள்ளார். இதில் பிரியங்கா மயங்கினார். தடைப்பட்ட தனது காதலை மோகனுடன் புதுப்பித்தார். இருவரும் கள்ளக்காதலர்களாக மாறினர்.
இருவரும் பல இடங்களுக்கு ஜோடியாக சுற்றித்திரிந்ததுடன் தனிமையில் உல்லாசமாகவும் இருந்துள்ளனர். மேலும் பிரியங்கா தனது கணவர் மற்றும் மகள்களை பிரிந்து மோகனை திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தார். அதன்படி இந்த ஆண்டு தொடக்கத்தில் காசிக்கு சென்ற பிரியங்கா, மோகனை ரகசிய திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு இருவரும் துபாய்க்கு ஹனிமூன் சென்றனர். அங்கு தங்கநகைகள், ஐபோன் உள்ளிட்டவற்றறை பிரியங்காவிற்கு வாங்கி கொடுத்துள்ளார் மோகன்.
இதற்கிடையே தான் தனது மனைவி கள்ளக்காதலனை திருமணம் செய்து கொண்டதை கணவர் பிரவீன் பசப்பா அறிந்தார். இதனால் கணவன் - மனைவி இடையே பிரச்சனை வெடித்தது. பிரியங்கா தனது கள்ளக்காதலன் மோகனுடன் பெங்களூரில் வசிக்க தொடங்கினார். இளைய மகள் வெண்ணிலாவை தன்னுடன் வைத்து கொண்டார் பிரியங்கா. மூத்த மகள் தந்தை பிரவீன் உடன் இருந்தார்.
கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி பிரியங்காவிற்கு பிறந்தநாளாகும். அப்போது மகள் வெண்ணிலா மற்றும் மோகனுடன் அவர் வெளியே சென்றார். வெண்ணிலாவிற்கு ஹோட்டலில் பிரியாணி வாங்கி கொடுத்து சாப்பிட வைத்ததார். அதன்பிறகு ஐஸ்கிரீம் சாப்பிட கொடுத்து ஏசி காரில் தூங்க வைத்தார். பிறகு வீட்டில் தூங்க வைத்த நிலையில் மறுநாள் காலையில் வெண்ணிலா இறந்துவிட்டதாக கணவர் பிரவீனுக்கு, பிரியங்கா தகவல் தெரிவித்தார்.
ஆனால் பிரியங்கா மீது பிரவீனுக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் அவர் தனது மகள் வெண்ணிலாவின் பிரேத பரிசோதனை அறிக்கையை பெற்று, இங்கிலாந்தில் குழந்தைகள் நல டாக்டராக பணியாற்றும் தனது சகோதரி பூர்ணிமாவிற்கு அனுப்பி வைத்தார். அதனை பார்த்தவர், பிரியாணி சாப்பிட்டு குழந்தை இறக்கவில்லை. இதில் மர்மம் உள்ளது. போலீசில் புகார் செய்யும்படி கூறினார். இதையடுத்து காடுகோடி போலீசில் பிரவீன் புகார் செய்தார். புகாரில் தனது மகளின் சாவில் சந்தேகம் உள்ளது. மனைவி பிரியங்கா தனது கள்ளக்காதலன் மோகன் உடன் சேர்ந்து கொலை செய்து இருக்கலாம் என்று 3 மாதங்களுக்கு பிறகு போலீசில் தெரிவித்து இருந்தார்.
இதனால் போலீசார் விசாரணை நடத்தினர். கள்ளக்காதலன் மோகனை பிடித்து விசாரித்தபோது தங்களின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் வெண்ணிலாவை கழுத்தை நெரித்து கொன்றதை ஒப்புக்கொண்டார். கொலையை மறைக்க பிரியாணி சாப்பிட்டு மகள் உயிரிழந்ததாக நாடகமாடியதாகவும் கூறினார். மோகனை போலீசார் கைது செய்துள்ள நிலையில் பிரியங்கா தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேிடி வருகின்றனர். இந்த சம்பவம் பெங்களூரை அதிர வைத்துள்ளது.
-
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
பெங்களூர் பன்னரகட்டா ரோட்டில் மெட்ரோ ரயில் சேவை.. வெளியான குட்நியூஸ்! செம -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications