சிக்க போவது யார்? பாஜக ஆட்சியில் நடந்த பிட்காயின் முறைகேடு.. எஸ்ஐடி அமைத்தது கர்நாடக காங். அரசு
பெங்களூர்: கர்நாடகாவில் கடந்த பாஜக ஆட்சியில் நடைபெற்ற பிட்காயின் முறைகேடு குறித்து மீண்டும் விசாரிக்க கூடுதல் டிஜிபி தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை சித்தராமையா அரசு அமைத்துள்ளது.
கர்நாடகாவில் முந்தைய பாஜக ஆட்சியின் போது பிட்காயின் முறைகேடு முதல்வர் பசவாராஜ் பொம்மை அரசுக்கு கடும் தலைவலியை ஏற்படுத்தியது. பெங்களூருவை சேர்ந்த பிரபல ஹேக்கரான ஸ்ரீகிருஷ்ணா என்ற ஸ்ரீகியை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்தது. பிறகு ஸ்ரீ கிருஷ்ணா ஜாமீனில் வெளிவந்தார். இந்தியா மட்டும் இன்றி வெளிநாட்டிலும் தொழில்அதிபர்கள், பணக்காரர்கள், பிரபல நிறுவனங்களின் வங்கி கணக்குகளை முடக்கி, பிட்காயின் முறைகேட்டில் ஸ்ரீகிருஷ்ணா ஈடுபட்டதாகவும் வெளிநாடுகளை சேர்ந்த ஹேக்கர்களும் அவருக்கு உதவியதாக தகவல் வெளியானது.

பிட்காயின் முறைகேடு கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இந்த பிட்காயின் முறைகேடு குறித்து பெங்களூர் காட்டன் பேட்டை போலீஸ் நிலையத்தில் முதலில் வழக்குப்பதிவானது. பின்னர் இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டு இருந்தது. இந்த முறைகேட்டில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதனால் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று அப்போது எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் வலியுறுத்தியது. இந்த நிலையில், தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் நிலையில், பிட்காயின் முறைகேடு விவகாரத்தை சித்தராமையா அரசு கையில் எடுத்துள்ளது. அதாவது இது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை கர்நாடக அரசு அமைத்துள்ளது.
இது குறித்து கர்நாடக அமைச்சர் பரமேஸ்வர் கூறுகையில், பிட்காயின் முறைகேடு குறித்து மறு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கூடுதல் டிஜிபி மனீஷ் கர்பீகர் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. மறு விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கை தாக்கல் செய்வார்கள். முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
பிட்காயின் விவகாரத்தில் மறு விசாரணை நடத்த எஸ்.ஐ.டி அமைக்கப்பட்டதை முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையும் வரவேற்றுள்ளார். பிட்காயின் முறைகேடு குறித்து விசாரணை நடத்துவதற்காக ஏடிஜிபியாக இருந்து வரும் மனீஷ் கர்பிகர் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் ஐ.ஜி வம்சி கிருஷ்ணா, துணை போலீஸ் கமிஷனர் அனூப் ஷெட்டி, போலீஸ் சூப்பிரண்டு சரத் ஆகிய 3 உயர் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
மறு விசாரணை நடத்துவதற்காக பிட்காயின் குறித்து இதுவரை விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் இருந்து அனைத்து ஆவணங்களையும் பெறுவது சிறப்பு புலனாய்வு குழு முடிவு செய்துள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், நீதிமன்றத்தில் முறையான அனுமதியை பெற சிறப்பு விசாரணை குழு முடிவு செய்துள்ளது.
பிட்காயின் முறைகேடு குறித்து மறு விசாரணை நடைபெறுவதால், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ஸ்ரீகிருஷ்ணா உள்ளிட்டோருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? இந்த விசாரணையில் தெரிய வரும் என்பதால் கர்நாடகாவில் இவ்விவகாரம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications