"விமானத்தின் அவசர வழிக் கதவை தேஜஸ்வி சூர்யா திறக்கவில்லை" புதிய விளக்கம் கொடுத்த அண்ணாமலை!
பெங்களூரு: விமானத்தின் அவசர வழிக் கதவை பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா திறக்கவில்லை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்திய சிந்தியா கூறுகையில், விமானத்தின் அவசர வழிக் கதவை தேஜஸ்வி சூர்யா தவறுதலாக திறந்ததாகவும், அதற்காக அவர் மன்னிப்பு கேட்டதாக தெரிவித்திருந்தார்.
கடந்த டிச.10ம் தேதி சென்னையிலிருந்து இண்டிகோ 6E-7339 விமானம் புறப்படத் தயாராக இருந்தபோது, அந்த விமானத்தின் அவசரவழிக் கதவை பயணி ஒருவர் திறந்ததால், விமானம் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.
அவசரகால கதவு திறக்கப்பட்டதன் காரணமாக, அவசரகால கதவு மற்றும் விமானத்தின் காற்றழுத்தம் மீண்டும் சரிபார்க்கப்பட்டு பின்னர் விமான புறப்பட்டது. இந்த செயலில் ஈடுபட்டவர் கர்நாடக பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா என்றும், அவருடன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இருந்ததாகவும் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் தெரிவித்திருந்தனர்.

தேஜஸ்வி சூர்யா விவகாரம்
இந்த விவகாரம் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி, கர்நாடக காங்கிரஸ்-ன் சிவக்குமார் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் விமானத்தின் அவசர வழிக் கதவை திறந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டு கடுமையாக விமர்சித்தனர். இந்த விவகாரத்தில் அவசரகால கதவு திறக்கப்பட்டது உண்மைதான் என உறுதிபடுத்திய இண்டிகோ விமான நிறுவனம், கதவை திறந்தவரின் பெயரை வெளியிடவில்லை.

விசாரணை
பின்னர் இந்த விவகாரம் குறித்து மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஒரு மாதத்திற்கு பின்னர் விசாரணைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து இண்டிகோ விமானத்தின் அவசர வழிக்கதவு திறக்கப்பட்ட விவகாரம் பற்றி விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்திய சிந்தியா விளக்கம் அளித்தார்.

மத்திய அமைச்சர் விளக்கம்
இதுகுறித்து ஜோதிராதித்திய சிந்தியா கூறுகையில், விமானத்தில் அவசர வழி கதவு திறக்கப்பட்ட விவகாரத்தில் தவறுதலாக கதவு திறக்கப்பட்டதாக பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார். இதற்காக அவர் மன்னிப்பும் கேட்டு விட்டதாக கூறினார். இதன் மூலம் அவசர வழிக் கதவை திறந்தது தேஜஸ்வி சூர்யா என்பது உறுதியானது.

அண்ணாமலை புதிய விளக்கம்
இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அவசர வழிக் கதவி திறக்கப்பட்டது தொடர்பாக புதிய விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார். கர்நாடகாவின் சிக்மகளூருவில் செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை கூறுகையில், விமானத்தின் அவசர வழிக் கதவை பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா திறக்கவில்லை. அவர் தனது கைகளை அவசர வழிக் கதவில் வைத்திருந்தார். அப்போது அவசர வழிக் கதவு சரியாக மூடப்படாமல் இருந்தது.

மன்னிப்பு கேட்டது உண்மையா?
இதனை விமான பணியாளர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றார். அது அவரின் கடமை. இதுதொடர்பான விளக்கத்தையும் தேஜஸ்வி சூர்யா விமான நிறுவனத்திற்கு அளித்துள்ளார். அதேபோல் மன்னிப்பு கேட்கவில்லை. விமானம் தாமதமானதற்காக பயணிகளிடம் தான் தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கேட்டார் என்று தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் விளக்கத்தால், இந்த விவகாரம் மீண்டும் விவாவத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு!












Click it and Unblock the Notifications