தொடக்கமே இப்படியா? வேட்புமனுவை தாக்கல் செய்த பிரகாஷ்ராஜ்.. முதல்நாளே விதிமீறல் புகார்!
நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் தேர்தல் விதிமுறை மீறல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

பெங்களூர்: நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் தேர்தல் விதிமுறை மீறல் புகார் அளிக்கப்பட்டுள்ளது .
நாடாளுமன்ற தேர்தல் களம் கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. வரும் ஏப்ரல் 11ம் தேதி லோக்சபா தேர்தல் தொடங்க இருக்கிறது.
இந்த தேர்தலில் போட்டியிட போவதாக பிரகாஷ்ராஜ் ஏற்கனவே அறிவித்து இருந்தார். சுயேட்சையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.

என்ன சொன்னார்
பிரகாஷ்ராஜ், இந்த வருடம் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போகிறேன். மக்களின் ஆட்சி இனி அமையும் ''ஆப்கி பார் ஜனதா சர்க்கார்''. நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பேன், என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் அவர் மத்திய பெங்களூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

இன்று தாக்கல்
இன்று அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இன்று காலை அவர் வேட்புமனுவை தாக்கல்செய்தார். சமூக செயற்பாட்டாளர்கள், ஆம் ஆத்மி கட்சியினர் இவர் வேட்புமனு தாக்கல் செய்யும் போது இவருடன் உடன் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புகார்
இந்த நிலையில் இவர்மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவர் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக தேர்தல் கட்டுப்பாட்டு அதிகாரி டி மூர்த்தி புகார் அளித்துள்ளார். கடந்த மார்ச் 12ம் தேதி பெங்களூர் எம்.ஜி சாலையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பிரகாஷ்ராஜ் பிரச்சாரம் செய்தார்.

ஏன் புகார்
ஆனால் இது அரசியல் சாராத பொதுக்கூட்டம் ஆகும். அதன் பெயரிலேயே இதற்கு அனுமதி வாங்கப்பட்டு இருக்கிறது. அதனால் இதில் அனுமதியை மீறி பிரகாஷ்ராஜ் பிரச்சாரம் செய்தது தவறு என்று தற்போது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. தேர்தல் ஆணையம் இந்த புகாரை விரைவில் விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications