நாளை காவிரி பந்த்: தமிழ்நாடு சரக்கு வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் நுழைய கர்நாடகா அதிரடி தடை!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: காவிரி பிரச்சனையில் நாளை கர்நாடகா தழுவிய பந்த் போராட்டம் நடைபெறுவதால் தமிழ்நாட்டு வாகனங்கள் அம்மாநிலத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

காவிரியில் தமிழ்நாட்டுக்கு சொட்டு காவிரி நீரை கூட திறந்துவிடக் கூடாது என்பது கன்னட அமைப்புகளின் போராட்டம். காவிரியில் ஏற்கனவே 5,000 கன அடி நீரை திறந்துவிட சொன்னது காவிரி மேலாண்மை ஆணையம். ஆனால் இதனை ஏற்க மறுத்து சொற்ப நீரை திறந்துவிட்டது கர்நாடகா. இதற்கு கன்னட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து தொடங்கிய போராட்டம் இப்போதும் தொடருகிறது. மண்டியா, பெங்களூரில் இன்றும் போராட்டங்கள் நடைபெற்றன.

Cauvery Bandh: Karnataka Govt. bans to enter Tamil Nadu Vehicles tomorrow

இதனைத் தொடர்ந்து இன்று முதல் 18 நாட்களுக்கு காவிரியில் 3,000 கன அடி நீரை தமிழ்நாட்டுக்கு திறக்க வேண்டும் என்பது காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவு. ஆனால் இதனை ஏற்கவே முடியாது; உச்சநீதிமன்றத்துக்கு போவோம் என்கிறார் கர்நாடகா முதல்வர் சித்தராமையா.

காவிரி பிரச்சனையில் ஏற்கனவே மண்டியா பந்த், பெங்களூர் பந்த் போராட்டங்கள் நடத்தப்பட்டுவிட்டன. ஆனாலும் வாட்டாள் நாகராஜ் போன்றவர்கள் விடாப்பிடியாக காவிரி டெல்டா சாராத ஒட்டுமொத்த கர்நாடகா பகுதிகளிலும் முழு அடைப்புப் போராட்டம் நாளை நடத்தப்படும் என அறிவித்துள்ளனர். இது கர்நாடகாவில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. பெங்களூர் பந்த், கர்நாடகா பந்த் ஆகியவற்றல் தொழில் துறைக்கு சுமார் ரூ4,000 கோடி இழப்பு ஏற்படுகிறது என்பது தொழில்துறையினர் ஆதங்கம்.

ஆனாலும் நாளை கர்நாடகா பந்த் நடைபெற இருப்பதை முன்னிட்டு அம்மாநில போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகாவுக்குள் இருசக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சத்தியமங்கலத்தில் இருந்து புளிஞ்சூர், கோலிபாளையம் வழியாக தாளவடி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சத்தியமங்கலத்தில் இருந்து திம்பம், தலமலை வழியா தாளவாடி செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக கர்நாடகா போலீசார் தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செல்ல வேண்டும் எனவும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

அத்துடன் தமிழ்நாடு கர்நாடகா எல்லையான ஓசூர் அத்திப்பள்ளி பகுதியிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்திப்பள்ளி எல்லையில் இரு மாநில போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+