என்ன ஒரே ரத்தமா இருக்கு! மோடிக்கு போன கடிதம்! காவிரி பிரச்சனையால் கன்னட நடிகர் செய்ததை பாருங்க!
பெங்களூர்: தமிழ்நாடு-கர்நாடகா இடையே காவிரி பிரச்சனை என்பது விஸ்வரூபம் எடுத்துள்ளது. கர்நாடாகாவில் பந்த் போராட்டம் நடந்து முடிந்துள்ளது. இத்தகைய சூழலில் தான் காவிரி பிரச்சனையில் கர்நாடகாவுக்கு நீதி கேட்டு பிரதமர் மோடிக்கு கன்னட நடிகர் ஒருவர் ரத்தத்தில் கடிதம் எழுதியதும், அதில் குறிப்பிட்ட விஷயமும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காவிரி நீரை பங்கீட்டு கொள்வதில் காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி கர்நாடகா தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் வழங்க வேண்டும்.

ஆனால் கர்நாடகா அரசு ஒவ்வொரு முறையும் தமிழகத்துக்கான தண்ணீரை உரிய முறையில் காவிரியில் திறப்பது இல்லை. தற்போது காவிரி நீர் பங்கீடு செய்வது தொடர்பான பிரச்சனை விஸ்வரூபமாகி உள்ளது.
கர்நாடகாவில் மழை இல்லை எனக்கூறி கர்நாடகா அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க மறுத்து வருகிறது. இதனால் தமிழ்நாடு உச்சநீதிமன்றம், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அணுகியே ஒவ்வொரு முறையும் தண்ணீரை பெற்று வருகிறது. ஆனாலும் கர்நாடகா தற்போது வரை தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை இன்னும் வழங்கவில்லை.
இதற்கிடையே தான் கடந்த மாதம் 28 ம் தேதி அக்டோபர் மாதம் 29ம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அக்டோபர் மாதம் 15ம் தேதி தமிழகத்துக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இதனை திறக்க அணையில் தண்ணீர் இல்லை. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி கர்நாடகா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இதற்கிடையே தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க கூடாது என போராட்டங்கள் விஸ்வரூபமெடுத்துள்ளன. மண்டியா, பெங்களூரில் பந்த் நடந்த நிலையில் கடந்த 29ம் தேதி கர்நாடகா பந்த் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்துக்கு கன்னட திரைப்பட நடிகர், நடிகைகள் முழு ஆதரவை தெரிவித்தனர். மேலும் தமிழகத்துக்கு தண்ணீர் கொடுப்பதை நிறுத்த வலியுறுத்தி கர்நாடகாவில் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்நிலையில் தான் கன்னட நடிகரான பிரேம் நெனபிரலி பிரதமர் மோடிக்கு ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளார். கர்நாடகாவுக்கு நீதி வேண்டும் என அவர் இந்த கடிதத்தை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் காவிரி பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும். கர்நாடகாவுக்கு நீதி வழங்க வேண்டும். காவிரி எங்களுடையது என எழுதியுள்ளார். இதுதொடர்பான வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தறே்பாது வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications