என்ன ஒரே ரத்தமா இருக்கு! மோடிக்கு போன கடிதம்! காவிரி பிரச்சனையால் கன்னட நடிகர் செய்ததை பாருங்க!
பெங்களூர்: தமிழ்நாடு-கர்நாடகா இடையே காவிரி பிரச்சனை என்பது விஸ்வரூபம் எடுத்துள்ளது. கர்நாடாகாவில் பந்த் போராட்டம் நடந்து முடிந்துள்ளது. இத்தகைய சூழலில் தான் காவிரி பிரச்சனையில் கர்நாடகாவுக்கு நீதி கேட்டு பிரதமர் மோடிக்கு கன்னட நடிகர் ஒருவர் ரத்தத்தில் கடிதம் எழுதியதும், அதில் குறிப்பிட்ட விஷயமும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காவிரி நீரை பங்கீட்டு கொள்வதில் காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி கர்நாடகா தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் வழங்க வேண்டும்.

ஆனால் கர்நாடகா அரசு ஒவ்வொரு முறையும் தமிழகத்துக்கான தண்ணீரை உரிய முறையில் காவிரியில் திறப்பது இல்லை. தற்போது காவிரி நீர் பங்கீடு செய்வது தொடர்பான பிரச்சனை விஸ்வரூபமாகி உள்ளது.
கர்நாடகாவில் மழை இல்லை எனக்கூறி கர்நாடகா அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க மறுத்து வருகிறது. இதனால் தமிழ்நாடு உச்சநீதிமன்றம், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அணுகியே ஒவ்வொரு முறையும் தண்ணீரை பெற்று வருகிறது. ஆனாலும் கர்நாடகா தற்போது வரை தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை இன்னும் வழங்கவில்லை.
இதற்கிடையே தான் கடந்த மாதம் 28 ம் தேதி அக்டோபர் மாதம் 29ம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அக்டோபர் மாதம் 15ம் தேதி தமிழகத்துக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இதனை திறக்க அணையில் தண்ணீர் இல்லை. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி கர்நாடகா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இதற்கிடையே தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க கூடாது என போராட்டங்கள் விஸ்வரூபமெடுத்துள்ளன. மண்டியா, பெங்களூரில் பந்த் நடந்த நிலையில் கடந்த 29ம் தேதி கர்நாடகா பந்த் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்துக்கு கன்னட திரைப்பட நடிகர், நடிகைகள் முழு ஆதரவை தெரிவித்தனர். மேலும் தமிழகத்துக்கு தண்ணீர் கொடுப்பதை நிறுத்த வலியுறுத்தி கர்நாடகாவில் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்நிலையில் தான் கன்னட நடிகரான பிரேம் நெனபிரலி பிரதமர் மோடிக்கு ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளார். கர்நாடகாவுக்கு நீதி வேண்டும் என அவர் இந்த கடிதத்தை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் காவிரி பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும். கர்நாடகாவுக்கு நீதி வழங்க வேண்டும். காவிரி எங்களுடையது என எழுதியுள்ளார். இதுதொடர்பான வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தறே்பாது வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications