அடங்காத வாட்டாள் நாகராஜ்- தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் தர எதிர்ப்பு- அக்.5-ல் கேஆர்எஸ் அணை முற்றுகை!
பெங்களூர்: தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து அக்டோபர் 5-ந் தேதி கிருஷ்ணராஜ சாகர் அணையை முற்றுகையிடும் 'கேஆர்எஸ் சலோ' போராட்டம் நடத்தப்படும் என கன்னட சலுவாளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு ஆகஸ்ட் 15-ந் தேதி வரை வினாடிக்கு 3,000 கன அடிநீரை திறக்க வேண்டும் என்பது காவிரி மேலாண்மை ஆணையத்தின் இன்றைய உத்தரவு. ஆனால் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை தரமுடியாது என்பது மாநில அரசின் நிலைப்பாடு என அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் சித்தராமையா.

மேலும் காவிரி நீரை திறந்துவிட முடியாது என்ற நிலைப்பாட்டால் ஏற்படக் கூடிய விளைவுகள்- அதாவது ஆட்சி கலைப்பு, ராணுவம் மூலம் மாநில அணைகளை மத்திய அரசு கைப்பற்றுதல் ஆகியவற்றின் சாத்தியங்கள் குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள், உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள், முன்னாள் அட்வகேட் ஜெனரல்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தப் போவதாகவும் கர்நாடகா முதல்வர் சித்தராமையா அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக இன்று கர்நாடகா தழுவிய பந்த் போராட்டம் நடத்தப்பட்டது. தலைநகர் பெங்களூரில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்ட போதும் தடையை மீறி போராட்டங்கள் நடத்தப்பட்டன. இப்போராட்டங்களில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதேபோல மண்டியா, ஹாசன், சாம்ராஜ் நகர், மைசூர் ஆகிய இடங்களிலும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
பெங்களூர் போராட்டத்தில் தடையை மீறி பங்கேற்ற கன்னட சலுவாளி கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ், ஆதரவாளர்களுடன் கைது செய்யப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வாட்டாள் நாகராஜ், அக்டோபர் 5-ந் தேதி கேஆர்எஸ் சலோ போராட்டம் நடத்தப்படும். அன்றைய தினம் பெங்களூர் மைசூர் சர்க்கிளில் இருந்து பேரணியாக புறப்பட்டு கிருஷ்ணராஜ சாகர் அணையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என அறிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 26-ந் தேதி பெங்களூர் பந்த் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது வம்படியாக கர்நாடகா தழுவிய போராட்டம் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியது வாட்டாள் நாகராஜ் கோஷ்டிதான். வாட்டாள் நாகராஜ் கோஷ்டியின் ஏற்பாட்டிலேயே இன்று கர்நாடகா பந்த் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் கர்நாடகாவின் காவிரி டெல்டா தவிர்த்த இதர மாவட்டங்களில் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு கிடைக்கவில்லை; அப்பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications