வெறும் 600 மீட்டர்தான்.. அரபிக் கடலில் தேடுங்கள்.. சித்தார்த் மாயத்தில் போலீசுக்கு பெரும் சிக்கல்
சிசிடி நிறுவனர் விஜி சித்தார்த் ஒருவேளை அரபிக்கடலில் அடித்து செல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்று போலீசார் தெரிவிக்கிறார்கள்.
Recommended Video
பெங்களூர்: சிசிடி நிறுவனர் விஜி சித்தார்த் ஒருவேளை அரபிக்கடலில் அடித்து செல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்று போலீசார் தெரிவிக்கிறார்கள்.
சிசிடி நிறுவனர் விஜி சித்தார்த் காணாமல் போன சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்தியா முழுக்க பல்வேறு கிளைகளை கொண்டு சிசிடி வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
ஆனால் இத்தனை இருந்தும் சிசிடி தற்போது நிறுவனர் இல்லாமல் தவிக்கும் நிலைக்கு உள்ளாகி இருக்கிறது. நேற்று மாலை மாயமான சிசிடி நிறுவனர் விஜி சித்தார்த் இப்போது வரை எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை.

தண்ணீர்
இவர் நேற்று மாலை மங்களூர் அருகே இருக்கும் ஜெப்பினா மோகரூ பகுதியில் உள்ள உல்லால் பாலத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது. தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்கிறார்கள். சில நேரடி சாட்சியங்களும் இதைத்தான் சொல்கிறது.

கடல்
இவர் விழுந்ததாக சந்தேகிக்கப்படும் ஜெப்பினா மோகரூ பகுதியில் உள்ள உல்லால் பாலத்தின் ஓடிக்கொண்டு இருக்கும் ஆறு நேத்ராவதி ஆறு ஆகும்.இந்த ஆறு மங்களூரு வழியாக சென்று அப்படியே கடலில் கலக்கிறது. இந்த பாலத்திற்கும் அரபிக் கடலுக்கும் இடையில் வெறும் 600 மீட்டர்தான் இருக்கிறது.

என்ன வாய்ப்பு
ஒருவேளை சித்தார்த் நேத்ராவதி ஆற்றில் விழுந்து இருந்தால், நேரடியாக அரபிக் கடலில் அடித்து செல்லப்பட்டு இருப்பார். ஆம் வெறும் 600 மீட்டர்தான் தூரம் என்பதால் நேற்று இரவே அவர் கடலில் அடித்து செல்லப்பட்டு இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் தற்போது நேத்ராவதி ஆற்றில் மட்டுமே போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.

மழை
தற்போது மங்களூரில் மிக மோசமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆற்றை தாண்டி கடலில் கலக்கும் கழிமுகம் பகுதியில் போலீசாரால் தேடுதல் வேட்டையை நடத்த முடியவில்லை. கடலிலும் அதீத அலை காரணமாக, தேடுதல் பணியை தொடங்க முடியவில்லை. இது சித்தார்த்தை கண்டுபிடிப்பதில் போலீசுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications