எல்லாம் சரி.. முக்கிய விஷயத்தை போலீஸ் மறைப்பது ஏன்? சித்தார்த் மாயத்திற்கு பின்னிருக்கும் மர்மம்!
சிசிடி நிறுவனர் விஜி சித்தார்த் காணாமல் போனதற்கு பின் நிறைய மர்மங்கள் நிலவி வருவதாக தெரிகிறது.
Recommended Video
பெங்களூர்: சிசிடி நிறுவனர் விஜி சித்தார்த் காணாமல் போனதற்கு பின் நிறைய மர்மங்கள் நிலவி வருவதாக தெரிகிறது. போலீஸ் இதில் முக்கிய விஷயம் பலவற்றை மறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிசிடி நிறுவனர் விஜி சித்தார்த் காணாமல் போய் இதோடு 12 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது. ஆனால் இவர் காணாமல் போனதில் இன்னும் எந்த விதமான துப்பும் கிடைக்கவில்லை.
அதே சமயம் இவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். ஜெப்பினா மோகரூ பாலத்திற்கு கீழ் இருக்கும் நேத்ராவதி ஆற்றில் இவர் விழுந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ஜெப்பினா மோகரூ எப்படி
இதனால் அந்த நேத்ராவதி ஆற்றில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. காலையில் இருந்து போலீசார் தொடங்கி பல்வேறு தனியார் அமைப்பினரும் இந்த பகுதியில் தீவிரமாக தேடி வருகிறார்கள். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாகவே விஜி சித்தார்த் இப்படி தவறான முடிவை எடுத்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

ஆனால் என்ன
ஆனால் மூன்று நாட்களுக்கு முன்பே விஜி சித்தார்த் மிக முக்கியமான பொருளாதார பிரச்சனை ஒன்றில் சிக்கினார் என்றும் சிசிடி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. விஜி சித்தார்த்துக்கு மைன்ட் ட்ரீ நிறுவனத்திடம் இருந்து அழுத்தம் வந்துள்ளது. அங்கு இவரின் பங்குகள் இருந்துள்ளது. இதை விற்க நினைத்ததில் பிரச்சனை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூன்று நாள்
அதன்படி 27ம் தேதியே இவருக்கு சிலர் போன் செய்து அழுத்தம் கொடுத்து இருக்கிறார்கள். இவர் வரி தாக்கல் செய்ததில் முறைகேடு இருப்பதாக சிலர் மிரட்டி இருக்கிறார்கள். அவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக 27ம் தேதியே விஜி சித்தார்த் இந்த கடிதத்தை எழுதிவிட்டார். ஆம் அவரின் கடிதம் 27ம் தேதியே எழுதப்பட்டுள்ளது. அப்போதே இவர் மாயமாகும் (அல்லது தற்கொலை) முடிவிற்கு வந்துவிட்டார் என்கிறார்கள்.

என்ன சொத்து
அதேபோல் தன்னுடைய சொத்துக்கள், பங்குகளை யாருக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர் கடிதத்தின் பின் பக்கம் எழுதியுள்ளார். மூன்று பக்கங்களில் அவர் இந்த விவரங்களை இணைத்துள்ளார். ஆனால் இந்த இரண்டு முக்கியமான விஷயங்களையும் போலீசார் தொடர்ந்து மறைத்து வருகிறார்கள். அந்த பங்கு குறித்த கடிதத்தை போலீஸ் வெளியிடவில்லை. போலீசார் அதை பற்றி பேசாமல் தவிர்த்து வருகிறார்கள்.

என்ன மர்மம்
மூன்று நாட்களுக்கு முன்பே கடிதம் எழுதி இருந்தால், 27ம் தேதி என்ன நடந்து இருக்கும். அவர் பங்குகளை விற்க அழுத்தம் அளித்தது யார் என்று பல்வேறு சிக்கல்கள், மர்மங்கள் தொடர்ந்து நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications