கபினியிலிருந்து வெளியேறும் தண்ணீர் பல மடங்கு அதிகரிப்பு.. காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
பெங்களூர்: கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. இதேபோன்று கேரளாவிலும் கடும் பருவ மழை கொட்டி வருகிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி உள்ளிட்ட காவிரி நதிக்கு குறுக்கே அமைக்கப்பட்டுள்ள அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது.

எனவே அனைத்து வரும் தண்ணீரை அப்படியே திறந்து விடுகிறது கர்நாடகா. இப்படி வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு, தினமும் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்த நிலையில் மத்திய நீர்வளத்துறை ஆணையம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கர்நாடகா மற்றும் கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, கபினி அணைக்கட்டில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. நாளை தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு வினாடிக்கு, 40 ஆயிரம் கன அடி அளவுக்கு தண்ணீர் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இன்று இரவு அல்லது நாளை காலையில் வினாடிக்கு, ஒரு லட்சம் கன அடி அளவாக அதிகரிக்கக் கூடும்.
எனவே தேவைப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துக்கொள்ளவும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications