"சிஎம்மை பாக்கணும்.. எனக்கு கொரோனா வந்திருக்கு" பதறியடித்து வந்த ஆம்புலன்ஸ்.. சங்கர் போட்ட ஸ்கெட்ச்!
ஆம்புலன்ஸ் கிடைக்காமல் சங்கர் என்பவர் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளார்
பெங்களூர்: ஆம்புலன்ஸும் கிடைக்கவில்லை... என்ன செய்வது என்றும் தெரியாமல், முதல்வர் வீட்டுக்கு நடந்தே போய் உதவி கேட்டு அதிர வைத்துள்ளார் கொரோனா நோயாளி ஒருவர்... இந்தியாவிலேயே குறைந்த அளவிலான டெஸ்ட்டுகளை செய்யும் மாநிலங்களில் ஒன்றான கர்நாடகத்தின் பெங்களூரில்தான் இந்த அக்கப் போர்!!
கொரோனாவிலிருந்து கூட தப்பி விடலாம் போல.. ஆனால் இந்த ஆம்புலன்ஸ் கிடைக்காமல், உரிய டாக்டர்கள் கிடைக்காமல் தவிக்கும் மக்களுக்குத்தான் அதிலிருந்து தப்ப வழியே தெரியவில்லை. இது இந்தியா முழுவதும் பொதுவான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. குறித்த நேரத்துக்கு ஆம்புலன்ஸ் கிடைப்பதில்லை. அதை விட முக்கியமாக டாக்டர்களிடம் போனால் எட்ட நின்று பார்த்து விட்டு அனுப்பி விடுகிறார்கள்.
பெரிய அவஸ்தையாக உள்ளது மக்களுக்கு. இந்த நிலையில்தான் பெங்களூரில் ஒரு பாசிட்டிவ் நோயாளி ஆம்புலன்ஸ் கிடைக்காமல் போய் தனது மனைவி, குழந்தைகளுடன் முதல்வர் வீட்டுக்கே போய் நியாயம் கேட்ட அதிர வைத்து விட்டார். அந்த நபரின் பெயர் சங்கர். இவரது சொந்த ஊர் தாவணகரே. ஆனால் மனைவி குழந்தைகளுடன் பெங்கள் பனசங்கரி பகுதியில் வசித்து வருகிறார்.

சோதனை
இவருக்கு திங்கள்கிழமை காய்ச்சல் வந்துள்ளது. இதையடுத்து அரசு மருத்துவமனைக்குப் போய் சோதனை செய்தார். ஆனால் அந்த மருத்துவமனையில் சேர்க்க மறுத்து திருப்பி அனுப்பி விட்டனர். இந்த நிலையில் வியாழக்கிழமை காலை இவருக்குப் போன் வந்தது. அதில் உங்களுக்கு கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளது. உங்களை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வரும் காத்திருங்கள் என்று கூறியுள்ளனர்.

பாதுகாவலர்கள்
முதல்வர் வீட்டுக்குப் போன அவர் அங்கிருந்த பாதுகாவலர்களிடம் முதல்வரை பார்க்க வேண்டும் என்று கூற அவர்கள் விவரம் கேட்க, இவரும் என்ன நடந்ததுன்னு சொல்ல பதறிப் போய் விட்டனர் பாதுகாவலர்கள். உடனே சங்கரை தனியாக உட்கார வைத்து விட்டு முதல்வருக்கு வேகமாக தகவல் கொடுத்தனர். நடந்ததைக் கேட்ட முதல்வர் உடனடியாக அதிகாரிகளை அழைத்து சங்கரை பத்திரமாக விக்டோரியா பொது மருத்துவமனையில் சேர்க்குமாறு உத்தரவிட்டார்.

நியாயம்
பிறகென்ன, பறந்து வந்தது ஆம்புலன்ஸ். சங்கரை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பத்திரமாக சேர்த்தனர் அதிகாரிகள். முதல்வர் வீட்டுக்குப் போவதற்கு முன்பு பவசங்குடி காவல் நிலையத்திற்கும் ஆட்டோவில் தனது மனைவி குழந்தைகளுடன் போய் உதவி கேட்டுள்ளார் சங்கர். ஆனால் அங்கிருந்தோர் அவரை விரட்டி விட்டுள்ளனர். எல்லாம் சரிவராமல் போகவேதான் முதல்வரிடமே நியாயம் கேட்க கிளம்பி விட்டார் சங்கர்.
Recommended Video

நோயாளி
"நோயுடன்தான் நாம் போராட வேண்டும்.. நோாளியுடன் அல்ல" என்பதை அதிகாரிகள் இப்படி தப்பு தப்பாக புரிந்து கொண்டு, நோயாளிகளை விரட்டி விட்டால் எப்படிப்பா நாட்டை விட்டு கொரோனாவை ஒழிக்க முடியும்.. பார்த்து பண்ணுங்க ராஜாக்களே.!
-
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
சிவகுமார் சிவபெருமான் ஆன கதை.. அப்ப தான் பதவியேற்றார், அதுக்குள்ள கெட்டப்பால் கொந்தளிக்குது கர்நாடகா -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications