கொரோனா படுத்தும்பாடு.. மருத்துவ கண்காணிப்பில் சீனா சென்று வந்த இரு பெங்களூர்வாசிகள்
Recommended Video
பெங்களூர்: கொரோனா வைரஸ் சீனாவில் பரவி வருவதை தொடர்ந்து அங்கிருந்து வந்த இரு பெங்களூர்வாசிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் கொரோனா வைரஸ் பரவி 80 -க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். 600-க்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வவ்வால்களை சாப்பிட்ட பாம்பிலிருந்து இந்த நோய் வந்ததாக தெரிகிறது. இதையடுத்து சீனாவிலிருந்து வருவோரை அந்தந்த மாநில மருத்துவ குழுவினர் சோதனைக்குட்படுத்தி அவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா என சோதனையிடுகின்றனர்.
அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இந்தியாவிலும் இந்த நோய் பரவி வருவதாக கூறப்படுகிறது. இது இரு நிலைகள் கொண்ட ஒரு நோய் ஆகும். முதல் நிலையில் இருந்தால் உயிரை காப்பாற்ற முடியும் என்றும் இரண்டாம் நிலைக்கு சென்றுவிட்டால் உயிரிழப்பு நிச்சயம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சீனாவிலிருந்து வந்த ராஜஸ்தான், பீகாரைச் சேர்ந்த தலா ஒருவருக்கு இந்த நோய் அறிகுறி தென்பட்டதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த இருவர் கடந்த ஜூன் 18-ஆம் தேதி சீனாவுக்கு சென்றுவிட்டு திரும்பினர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு அவர்கள் சளி தொல்லை இருந்ததை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது ரத்த மாதிரி ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் சீனா சென்றுவிட்டு திரும்பியவர்கள் காய்ச்சல், இருமல், மூச்சு பிரச்சினை இருந்தால் அருகில் உள்ள மருத்துவமனைகளை அணுகுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
-
இந்திய டெக் ஊழியர்களை கதறவிட்ட Meta.. 3 பிரிவில் கண்ணை மூடிக்கொண்டு பணிநீக்கம்.. எங்குபோய் முடியுமோ -
சென்னையை மீண்டும் அலறவிடும் கொரோனா! மருத்துவர் பகிர்ந்த திடுக் தகவல்.. யாருக்கெல்லாம் ஆபத்து? -
ஜப்பானுக்கு தண்ணி காட்டும் சீனா.. இருந்தது ஒன்னே ஒன்னு அப்போ அதுவும் போச்சா!! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications