கொரோனா.. பெங்களூரில் உச்சகட்ட முன்னெச்சரிக்கை.. மறு உத்தரவு வரும்வரை ப்ரீகேஜி பள்ளிகளுக்கு விடுமுறை
பெங்களூர்: கர்நாடகாவில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனோ வைரஸ் பீதிதான் இதற்கு காரணம்.
Recommended Video
"சுகாதார ஆணையரின் ஆலோசனையின் பேரில், பெங்களூரு வடக்கு, தெற்கு மற்றும் கிராமப்புறங்களில் உள்ள எல்.கே.ஜி மற்றும் யுகேஜி பள்ளிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) விடுமுறை அறிவித்துள்ளோம்" என்று மாநில முதன்மை மற்றும் இடைநிலைக் கல்வி அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில் தெரிவித்திருந்தார்.

அமைச்சர் தாமதமாக இந்த அறிவிப்பை வெளியிட்டதால், பல பள்ளிகளும், இன்று காலை, பெற்றோருக்கு, தங்கள் பள்ளிகளில் விடுமுறை விடப்பட்ட தகவலை தெரிவித்தன. மறு உத்தரவு வரும்வரை விடுமுறை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிலங்களான கேரளா, தெலுங்கானா மற்றும் தமிழகத்தில், கொரோனா பாதிப்புகள் பதிவாகியதை அடுத்து இந்த நடவடிக்கை அவசியம் என்று சுகாதார, குடும்ப நலன் மற்றும் ஆயுஷ் சேவைகள் ஆணையர் பங்கஜ் குமார் பாண்டே தெரிவித்தார்.
"இதுதொடர்பாக, பிபிஎம்பி மற்றும் பெங்களூரு நகர்ப்புறங்களில் கேஜி-க்கு முந்தைய, எல்.கே.ஜி மற்றும் யுகேஜி ஆகியவற்றில் உடனடியாக விடுமுறையை அறிவிக்கவும், நாவல் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான மறு உத்தரவுகள் வரும் வரை விடுமுறை தொடர வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது," என்று அரசின் சுற்றறிக்கை கூறுகிறது.
இதுவரை கர்நாடக மாநிலத்தில் 890 பேர் கண்காணிப்புக்காக அடையாளம் காணப்பட்டுள்ளனர், அவர்களில் 258 பேர் 28 நாள் கண்காணிப்பை நிறைவு செய்துள்ளனர், 622 பேர் தனிமைப்படுத்தலின் கீழ் வீட்டிலேயே உள்ளனர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. COVID-19 பாதிக்கப்பட்ட நாடுகளுக்குச் சென்று வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டவர்களும் இதில் அடங்குவர்.
மொத்தம் ஆறு பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்றுவரை, அறிகுறிகளுக்கான நபர்களின் 416 மாதிரிகள் சோதனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன, அவற்றில் 357 மாதிரிகள் எதிர்மறையாக சோதனை செய்யப்பட்டுள்ளன.
கர்நாடகா இதுவரை 87,066 பயணிகளை ஸ்க்ரீன் செய்துள்ளது. 5,256 பயணிகள் மங்களூர் மற்றும் கார்வார் துறைமுகங்களில் ஸ்க்ரீன் செய்யப்பட்டுள்ளனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications