Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்த சொத்துகளை எங்களுக்கே தரணும்.. ஜெ.தீபா வழக்கில் கோர்ட் அதிரடி தீர்ப்பு!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு உரிமை கோரி ஜெ.தீபா மற்றும் தீபக் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு கடந்த 2014ஆம் ஆண்டு பெங்களூர் தனி நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அவர்கள் இதை எதிர்த்து கர்நாடகா ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் அவர்கள் 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Court dismisses J Deepas plea that claiming right to jayalalithas assets

இதை எதிர்த்து கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. கடந்த 2017ஆம் ஆண்டு கர்நாடக ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. ஜெயலலிதா அதற்கு முன்பே மரணம் அடைந்துவிட்டதால், அவரது பெயர் தீர்ப்பில் இருந்து நீக்கப்பட்டது. சசிகலா உள்பட 3 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறை தண்டனையை அனுபவித்தனர்.

முன்னதாக சொத்துக் குவிப்பு புகாரை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் ஜெயலலிதா வீட்டில் சோதனையிட்டு, தங்க வைர நகைகள், விலை உயர்ந்த பட்டு புடவைகள், செருப்புகள், கம்ப்யூட்டர்கள் உள்பட பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்தனர். பெங்களூர் விதான சவுதாவில் உள்ள கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சேலைகள், செருப்புகள், மின்சாதன பொருட்கள், தங்கம், வெள்ளி, வைர நகைகள் உள்ளிட்ட பொருட்களை ஏலம் விட வேண்டும் என்று பெங்களூரை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நரசிம்மமூர்த்தி பெங்களூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ஏலம் விடுவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமனம் செய்தது.

இதை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் அண்ணன் மகன் தீபக் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். மறைந்த ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களையும் அவரது சட்டரீதியான வாரிசுகளான தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், ஏற்கனவே ஜெயலலிதாவின் வாரிசாக தங்களை ஏற்றுக்கொண்டு பல்வேறு சொத்துக்களை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியிருப்பதாகவும் வாதிட்டனர்.

இந்நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளுக்கு உரிமை கோரி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தீபா மற்றும் தீபக் தாக்கல் செய்த மனுவை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை வாரிசுதாரர்கள் உரிமை கோர முடியாது என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+