கர்நாடகாவில் இவர்களுக்கு எல்லாம் கொரோனா பரிசோதனை கட்டாயம்.. மாநில சுகாதாரத்துறை உத்தரவு
பெங்களூர்: கர்நாடகாவில் இன்புளுயன்சா போன்ற நோய் பாதிப்புகள் உள்ளவர்களுக்கு அறிகுறிகள் இருந்தால் கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா என்றும் கொடிய வைரஸ் உலக நாடுகளை பாடாய் பாடுத்தி வருகிறது. தனி மனித இடைவெளி, முக கவசம், லாக் டவுன் பல கட்டுப்பாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டது. கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் உலக நாடுகளை முடக்கி போட்ட கொரோனா அதன்பிறகு தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகே ஓரளவு கட்டுக்குள் வந்தது.
இருந்தாலும் அவ்வப்போது கொரோனா உருமாற்றம் அடைந்து புது வைகை கொரோனாவாக பரவி மக்களை இன்னலுக்கு உள்ளாக்கியது. பிறகு பாதிப்பு சற்று தணிந்தது. குறிப்பாக கடந்த ஒரு ஆண்டாக கொரோனா பரவல் இல்லாத நிலையில் தற்போது மீண்டும் ஆட்டம் காணத்தொடங்கியுள்ளது. அதாவது, தற்போது உலகின் பல நாடுகளில் JN1 என்ற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் JN1 வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கேரள மாநிலத்தில் கொரோனா அதிகம் பரவியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கடந்த 227 நாட்களுக்கு பின்னர் இந்தியாவில் ஒரே நாளில் 841 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கர்நடாகவில் கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதால் அங்கு மீண்டும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இன்புளுயன்சா பாதிப்பு போன்ற நோய் அறிகுறிகள் இருந்தால் கொரோனா பரிசோதனை கட்டயம் செய்ய என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் கூறியதாவது:- இன்புளுயன்சா போன்ற பாதிப்பு அல்லது கடுமையான சுவாச நோய்கள் இருந்தால் கொரோனா பரிசோதனையை கட்டாயம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விரைவில் கொரோனா குறித்த விவரங்களை பெற கொரோனா ஹெல்ப் லைன் அறிமுகம் செய்யப்படும். தினமும் 7 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. கொரோனா பாதிப்பு விகிதம் 3.82 சதவிகிதமாக உள்ளது. மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் இன்னும் குறையவில்லை. பக்கத்து மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கிவிட்டது. கொரோனா பாதிப்பு கண்டறியவர்களை அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். அறிகுறிகள் இருப்பவர்களை கண்காணிக்க வேண்டும்.
அவர்களுக்கு பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டும். வீட்டு தனிமையில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். அடுத்த வாரத்தில் இருந்து கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டெக்னிக்கல் ஆலோசனைக் குழு நேற்று முன் தினம் சந்திதது சில வழிகாட்டுதல்களை வழங்கியது. அந்த வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்றார்.
-
மகளிர் உரிமை தொகை.. இந்த மாதம் வராது.. ஆனால் தேடி வரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Nanjil Sampath: விஜய் அனுபவம் குறைந்தவர்.. குறை உள்ளது.. நாஞ்சில் சம்பத் தடாலடி பேச்சு -
Samson: சொந்த கேப்டன், பயிற்சியாளரால் ஏற்பட்ட அவமானம்.. காத்திருந்து கம்பேக் கொடுத்த சஞ்சு சாம்சன்! -
தொடக்கூடாத கையைத் தொட்டதா ஈரான்? ஜப்பான் செய்த அதே தவறு.. 30 விநாடியில் மாறப்போகும் உலக வரைபடம்! -
சங்கீதா கொடுத்த விவாகரத்து வழக்கு.. விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த மகன் ஜோசன்.. புது பஞ்சாயத்து -
திமுக விஸ்வரூபம் எடுத்துவிட்டது.. அதிமுக தலைவர்களை இணைப்பதன் பின்னணி இதுதான்.. பத்திரிகையாளர் மணி! -
1 ராஜ்ய சபா, 23 தொகுதிகள்.. காங்கிரஸ்க்கு மார்ச் 3 வரை கெடு.. தொகுதி பங்கீடு பேச்சில் நடந்தது என்ன? -
அப்போ விரிசல் உண்மைதான் போல.. மோடி கூட விஷ் பண்ணிட்டாரே.. ஸ்டாலினை தாமதாக வாழ்த்திய ராகுல் -
டேஞ்சர்.. சிவப்புக் கொடியை ஏற்றிய ஈரான்.. இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? -
எடப்பாடி எதுக்குத் தான் இருக்காரு.. அதிமுகவை அண்டர் கண்ட்ரோலில் எடுத்த அமித் ஷா! குமுறும் ர.ர.க்கள்! -
சிபிஎஸ்இ 10 & 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு.. மத்திய கிழக்கு மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு -
இந்திய அணி ஏமாற்றி வென்றுவிட்டது.. ஹெட்மயர் விக்கெட்டில் ஐசிசி தில்லு முல்லு.. முகமது ஆமீர் புகார்!












Click it and Unblock the Notifications