Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்நாடகாவில் இவர்களுக்கு எல்லாம் கொரோனா பரிசோதனை கட்டாயம்.. மாநில சுகாதாரத்துறை உத்தரவு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் இன்புளுயன்சா போன்ற நோய் பாதிப்புகள் உள்ளவர்களுக்கு அறிகுறிகள் இருந்தால் கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா என்றும் கொடிய வைரஸ் உலக நாடுகளை பாடாய் பாடுத்தி வருகிறது. தனி மனித இடைவெளி, முக கவசம், லாக் டவுன் பல கட்டுப்பாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டது. கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் உலக நாடுகளை முடக்கி போட்ட கொரோனா அதன்பிறகு தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகே ஓரளவு கட்டுக்குள் வந்தது.

இருந்தாலும் அவ்வப்போது கொரோனா உருமாற்றம் அடைந்து புது வைகை கொரோனாவாக பரவி மக்களை இன்னலுக்கு உள்ளாக்கியது. பிறகு பாதிப்பு சற்று தணிந்தது. குறிப்பாக கடந்த ஒரு ஆண்டாக கொரோனா பரவல் இல்லாத நிலையில் தற்போது மீண்டும் ஆட்டம் காணத்தொடங்கியுள்ளது. அதாவது, தற்போது உலகின் பல நாடுகளில் JN1 என்ற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

covid-test-is-mandatory-for-people-with-respiratory-problems

இந்தியாவிலும் JN1 வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கேரள மாநிலத்தில் கொரோனா அதிகம் பரவியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கடந்த 227 நாட்களுக்கு பின்னர் இந்தியாவில் ஒரே நாளில் 841 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கர்நடாகவில் கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதால் அங்கு மீண்டும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இன்புளுயன்சா பாதிப்பு போன்ற நோய் அறிகுறிகள் இருந்தால் கொரோனா பரிசோதனை கட்டயம் செய்ய என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் கூறியதாவது:- இன்புளுயன்சா போன்ற பாதிப்பு அல்லது கடுமையான சுவாச நோய்கள் இருந்தால் கொரோனா பரிசோதனையை கட்டாயம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விரைவில் கொரோனா குறித்த விவரங்களை பெற கொரோனா ஹெல்ப் லைன் அறிமுகம் செய்யப்படும். தினமும் 7 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. கொரோனா பாதிப்பு விகிதம் 3.82 சதவிகிதமாக உள்ளது. மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் இன்னும் குறையவில்லை. பக்கத்து மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கிவிட்டது. கொரோனா பாதிப்பு கண்டறியவர்களை அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். அறிகுறிகள் இருப்பவர்களை கண்காணிக்க வேண்டும்.

அவர்களுக்கு பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டும். வீட்டு தனிமையில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். அடுத்த வாரத்தில் இருந்து கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டெக்னிக்கல் ஆலோசனைக் குழு நேற்று முன் தினம் சந்திதது சில வழிகாட்டுதல்களை வழங்கியது. அந்த வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+