கர்நாடகாவில் அதிவேகமாக பரவும் கொரோனா- ஜன.2 முதல் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் அதிவேகமாக கொரோனா பரவுவதால் ஜனவரி
2-ந் தேதி முதல் முன் களப் பணியாளர்கள், முதியவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட உள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 182 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் தற்போதைய நிலையில் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 4,309. நாட்டிலேயே கேரளாவில்தான் அதிகமாக நேற்று 381 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கேரளாவில் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 2,082.

Covid vaccination to be held in Karnataka from Jan.2

நாட்டில் புதிய வகை கொரோனா தொற்று JN1 பாதிப்பும் அதிகமாக இருந்து வருகிறது. கர்நாடகாவில் குளிர் காலம் என்பதால் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவக் கூடும் எனவும் அச்சம் நிலவுகிறது. இதனையடுத்து கொரோனா பரவலைத் தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் கர்நாடகா அரசு அமைச்சரவை துணை குழுவை அமைத்தது. இக்குழு, கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவின் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள்- ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட இணை நோய் உள்ளவர்கள் முக கவசம் அணிய உத்தரவிடப்பட்டது. அத்துடன் 60 வயதுக்கு மேற்பட்டோர் முன் களப் பணியாளர்களுக்கு மீண்டும் தடுப்பூசி போடப்படும் என முடிவு செய்யப்பட்டது.

கர்நாடகாவில் வரும் 2-ந் தேதி முதல் மீண்டும் தடுப்பூசி போடும் பணியை அம்மாநில அரசு தொடங்க உள்ளது. 3-வது தடுப்பூசி போட விரும்புவோர் ஆதார் கார்டு எண்ணை கொடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+