சிஆர்பிஎப் கமாண்டோ வீரருக்கே இந்த கதி.. காலில் சங்கிலி கட்டி இழுத்து சென்ற போலீஸ்.. காரணத்தை பாருங்க
பெங்களூர்: ஊரடங்கு விதிகளை மீறிய சி.ஆர்.பி.எப். வீரரை சங்கிலியால் கட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர், போலீசார். இந்த புகைப்படம் வெளியாகி நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், பெலகாவி நகரை சேர்ந்தவர் சச்சின் சாவந்த். மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் கமாண்டோ படை பிரிவில் பணியாற்றி வருகிறார். மாவோயிஸ்டுகள் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சச்சின் கொரில்லா போர் முறையில் திறன் பெற்றவர்.

தற்போது விடுமுறையில் இருந்த இவர், சீருடையின்றி வழக்கம்போல் அணியும் ஆடைகளுடன் வெளியே சென்றுள்ளார். ஆனால் முகக் கவசம் அணியவில்லை. முக கவசம் அணியாமல் வெளியே சென்றார் என்பதற்காக சச்சின் சாவந்த் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டு உள்ளார். இதுபற்றிய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியது.
இதுபற்றி சி.ஆர்.பி.எப். தலைமை சார்பில், கர்நாடக தலைமை காவல் அதிகாரிக்கு எழுதியுள்ள கடிதத்தில், எங்களது வீரரை அடித்தும், கைகளை கட்டி போட்டும், வெறுங்கால்களுடன் காவல் நிலையத்திற்கு இழுத்து சென்றும், சங்கிலிகளால் பிணைத்தும் மற்றும் தரையில் உட்கார வைத்தும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. போலீசார் இதனை தவிர்த்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
போலீசாருக்கு எதிராக எப்.ஐ.ஆர். ஒன்றை புகாராக அளிக்கவும் சி.ஆர்.பி.எப். தலைமை பரிசீலனை செய்து வருகிறதாம். எனினும், முக கவசம் அணியாதது பற்றி கேட்ட கான்ஸ்டபிள்கள் இருவரையும், சி.ஆர்.பி.எப். வீரர் அடித்து, உதைத்ததாகவும் எனவே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவிக்கிறது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க, கர்நாடக போலீஸ் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications