தர்மஸ்தலா வழக்கில் பெரிய சதி நடந்துள்ளது.. சொல்வது கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார்
பெங்களூர்: கர்நாடக மாநிலம் தர்மஸ்தலா பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெண்கள் கொன்று புதைக்கப்பட்டடிருப்பதாக புகார் எழுந்திருக்கிறது. இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை கர்நாடக அரசு அமைத்திருக்கிறது. இந்நிலையில், இந்த வழக்கில் மிகப்பெரிய சதி நடந்திருப்பதாக அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
தர்மஸ்தலா கோயிலின் முன்னாள் சுகாதார ஊழியர் ஒருவர், கோயில் நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் பல உடல்களை ரகசியமாக புதைத்ததாகக் கூறியிருந்தார். இது கர்நாடகா முழுவதும் சலசலப்புகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில், முன்னாள் சுகாதார பணியாளரின் வாக்குமூலம் குறித்து கர்நாடக காங்கிரஸ் கமிட்டிக்குள் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இந்த வழக்கே திட்டமிட்ட சதி என்று சிவக்குமார் விமர்சித்துள்ளார்.
"இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று நான் சொல்ல மாட்டேன், ஆனால் கோயிலை களங்கப்படுத்த நன்கு திட்டமிடப்பட்ட உத்தி. நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஒரு பாரம்பரியத்தை கெடுக்க அவர்கள் வந்துள்ளனர்.
சுகாதார பணியாளர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். காங்கிரஸ் சட்டமன்றத்தில் இதை விவாதித்தது. தவறாக வழிநடத்துபவர்கள் மற்றும் அவதூறு பரப்புபவர்களை நாங்கள் ஆராய்ந்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் கூட பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். உள்துறை அமைச்சரும் இந்த முழு வழக்கின் விவரங்கள் தனக்குத் தெரியும் என்று கூறியுள்ளார். அங்கு என்ன இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். அது ஒரு வெற்றுப் பெட்டி" என்று கூறியிருக்கிறார்.
தினேஷ் குண்டு ராவ் இது குறித்து கூறுகையில், "முன்னாள் சுகாதார ஊழியரின் நோக்கங்கள் விசாரிக்கப்பட வேண்டும். இதை பூதாகரமான விஷயம் போல அவர் ஊதி பெரியதாக மாற்றினார். இது குறித்த உண்மையை விசாரிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
-
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி












Click it and Unblock the Notifications