தர்மஸ்தலா வழக்கில் பெரிய சதி நடந்துள்ளது.. சொல்வது கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார்
பெங்களூர்: கர்நாடக மாநிலம் தர்மஸ்தலா பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெண்கள் கொன்று புதைக்கப்பட்டடிருப்பதாக புகார் எழுந்திருக்கிறது. இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை கர்நாடக அரசு அமைத்திருக்கிறது. இந்நிலையில், இந்த வழக்கில் மிகப்பெரிய சதி நடந்திருப்பதாக அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
தர்மஸ்தலா கோயிலின் முன்னாள் சுகாதார ஊழியர் ஒருவர், கோயில் நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் பல உடல்களை ரகசியமாக புதைத்ததாகக் கூறியிருந்தார். இது கர்நாடகா முழுவதும் சலசலப்புகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில், முன்னாள் சுகாதார பணியாளரின் வாக்குமூலம் குறித்து கர்நாடக காங்கிரஸ் கமிட்டிக்குள் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இந்த வழக்கே திட்டமிட்ட சதி என்று சிவக்குமார் விமர்சித்துள்ளார்.
"இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று நான் சொல்ல மாட்டேன், ஆனால் கோயிலை களங்கப்படுத்த நன்கு திட்டமிடப்பட்ட உத்தி. நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஒரு பாரம்பரியத்தை கெடுக்க அவர்கள் வந்துள்ளனர்.
சுகாதார பணியாளர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். காங்கிரஸ் சட்டமன்றத்தில் இதை விவாதித்தது. தவறாக வழிநடத்துபவர்கள் மற்றும் அவதூறு பரப்புபவர்களை நாங்கள் ஆராய்ந்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் கூட பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். உள்துறை அமைச்சரும் இந்த முழு வழக்கின் விவரங்கள் தனக்குத் தெரியும் என்று கூறியுள்ளார். அங்கு என்ன இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். அது ஒரு வெற்றுப் பெட்டி" என்று கூறியிருக்கிறார்.
தினேஷ் குண்டு ராவ் இது குறித்து கூறுகையில், "முன்னாள் சுகாதார ஊழியரின் நோக்கங்கள் விசாரிக்கப்பட வேண்டும். இதை பூதாகரமான விஷயம் போல அவர் ஊதி பெரியதாக மாற்றினார். இது குறித்த உண்மையை விசாரிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications