SHOCKING: வாயில் துணி.. 8 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை.. சாக்கடையில் மிதந்த சடலம்.. 4பேர் கைது
8 வயது சிறுமியை கொன்ற 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்
பெங்களூரு: 8 வயது சிறுமியின் வாயில் துணியை அடைத்து, பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அந்த பிஞ்சுவின் கழுத்தையும் நெறித்து சாக்கடையில் தூக்கி எறிந்துள்ளனர் 4 கொடூரர்கள்.. இந்த பயங்கர சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.
மங்களூரு அருகே கூலி வேலை செய்யும் தம்பதி வசித்து வருகின்றனர்.. இவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.. பிழைப்பு தேடி இங்கு வந்துள்ளனர்.. கணவருக்கு 35 வயதாகிறது, மனைவிக்கு 28 வயதாகிறது.. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 2 வருடமாக மங்களூரு அருகே உள்ள பராரி என்ற கிராமத்தில் உள்ள ராஜ் டைல்ஸ் ஃபேக்டரியில் ஒரு குடிசை போட்டு தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர்.

காணவில்லை
இந்நிலையில், கடந்த நவம்பர் 21 ம் தேதி சாயங்காலம், இவர்களின் 4 குழந்தைகளும் தெருவில் விளையாடி கொண்டிருந்தனர்.. இதில் 3 குழந்தைகள் வீட்டுக்கு வந்துவிட்டனர்.. ஆனால் 8 வயது சிறுமி மட்டும் வீடு திரும்பவில்லை... இதனால் பதறி போன பெற்றோர், குழந்தையை தேடி அலைந்தனர்.. கிட்டத்தட்ட 2 மணி நேரத்துக்கு பிறகு, டைல்ஸ் ஃபேக்டரி வளாகத்திலேயே, கழிவு நீர் செல்லும் சாக்கடையில் சடலமாக அந்த குழந்தை விழுந்து கிடந்ததை பார்த்து கதறி துடித்தனர்.

சடலம்
இதுகுறித்து, உடனடியாக மங்களூரு புறநகர் போலீசாருக்கு தகவல் தரப்பட்டது.. போலீசாரும் விரைந்து வந்து சிறுமியின் சடலத்தை மீட்டு விசாரணையை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பினர்.. அந்த ரிப்போர்ட்டில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தெரியவந்தது.. இதையடுத்து, அந்த ஃபேக்டரியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்த போலீசார், அதிர் பதிவாகியிருநத் காட்சிகளை வைத்து, சிலரை விசாரித்தனர்.

சாக்கடை
இவர்களும் கூலி தொழிலாளர்கள்தான்.. மத்திய பிரதேசம், ஜார்கண்ட் மாநிலங்களை சேர்ந்தவர்கள்.. முனீம்சிங், மணீஷ்திர்கி, முகேஷ்சீங், ஜெய் சிங் ஆகியோரிடம் துருவி துருவி விசாரணை மேற்கொண்டபோதுதான், சிறுமியை இவர்கள் அனைவருமே பலாத்காரம் செய்ததும், இறுதியில் அவரை கொலை செய்து சாக்கடையில் தூக்கி வீசியதும் தெரியவந்தது..

வன்கொடுமை
இந்த சம்பவம் தொடர்பாக, மங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார், செய்தியாளர்கர்களிடம் சொன்னதாவது: சம்பவத்தன்று சிறுமி விளையாடி கொண்டிருநத்போது, இந்த 4 பேரும் அந்த பக்கமாக வந்தள்ளனர்.. சிறுமியை பார்த்ததும் அருகில் வந்து, சாக்லேட் வாங்கி தருவதாக சொல்லி, தாங்கள் தங்கி இருக்கும் ரூமுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்..

கொலை
அப்போது சிறுமி சத்தம் போடவும், வாயில் ஒரு துணியை வைத்து அடைத்து, பலாத்கார செயலில் ஈடுபட்டுள்ளனர்.. இறுதியில் அந்த குழந்தையை கழுத்தை இறுக்கி கொன்று, சாக்கடையில் கொண்டு போய் வீசிவிட்டு மறுபடியும் ரூமுக்கு வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்த 4 கொடூரர்களையும் போக்சாவில் கைது செய்த போலீசார் விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை கர்நாடகாவில் ஏற்படுத்தி வருகிறது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications