கர்நாடகாவில் 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத் தேர்தல் அறிவிக்காத தேர்தல் ஆணையம்.. பின்னணி இதுதான்
பெங்களூர்: கர்நாடகாவில் 17 எம்எல்ஏக்களை, முந்தைய சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதிநீக்கம் செய்திருந்த நிலையில், அதில் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
அக்டோபர் 21ம் தேதி இந்த 15 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று, அக்டோபர் 24-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை வெளியாக உள்ளது.

கர்நாடகாவில் நடைபெற்ற காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அரசுக்கு, கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெற்று அதன் மூலம் ஆட்சி கலைப்புக்கு உறுதுணையாக இருந்ததாக கூறி 17 எம்எல்ஏக்களை, அப்போதைய, சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்திருந்தார்.
இருப்பினும் பெங்களூரு நகரில் உள்ள ராஜராஜேஸ்வரி நகர் மற்றும் ரெய்ச்சூர் மாவட்டத்திலுள்ள மஸ்கி ஆகிய இரு தொகுதிகளுக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப் படவில்லை.
கடந்த பொதுத் தேர்தலின்போது இந்த தொகுதிகளில் முறையே காங்கிரஸ் வேட்பாளர்கள் முனிரத்னா, மற்றும் பிரதாப் கவுடா பாட்டில் ஆகியோர் வெற்றி பெற்றிருந்தனர்.
இதில் ராஜராஜேஸ்வரி நகரில் ஏராளமான போலி வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை எதிர்த்து பாஜக வேட்பாளர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதேபோல மஸ்கி, தொகுதியில், மிகச் சொற்ப வாக்கு எண்ணிக்கையில் தான் பிரதாப் கவுடா பாட்டீல் வெற்றி பெற்றிருந்தார்.
இதை எதிர்த்து அந்த தொகுதி, பாஜக வேட்பாளர் கர்நாடகா ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்விரு வழக்குகளும் நிலுவையில் இருப்பதால் இந்த இரு தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.
இதனிடையே தங்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று உச்சநீதிமன்றத்தில் தகுதிநீக்கத்திற்கு உள்ளான, எம்எல்ஏக்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில் தேர்தல் ஆணையம் 15 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவித்துள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்ல அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications