Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதம்.. வட இந்திய டிவி சேனல்களுக்கு செக் வைக்கும் கர்நாடக அரசு.. பிரபல செய்திவாசிப்பாளர் மீது வழக்கு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பிரபல தனியார் இந்தி தொலைக்காட்சியான ஆஜ் த்க்கின் செய்தி வாசிப்பாளர் சுதிர் சவுத்ரி மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் நடந்துகொண்டதாக கூறி அவருக்கு எதிராக கர்நாடக காவல் துறை வழக்கு ஒன்றை பதிவு செய்து உள்ளது.

இந்தி தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்களில் பிரபலமான முகமாக அறியப்படுபவர் சுதிர் சவுத்ரி. இவர் கர்நாடக அரசின் வணிக வாகன மானிய திட்டம் குறித்த செய்தி ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், இந்த மானிய திட்டங்கள் எல்லாம் சிறுபான்மையினருக்கு மட்டுமே வழங்கப்படுவதாகவும் இந்துக்களுக்கு வழங்கப்படுவது இல்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

FIR against news reader Sudhir Chowdhary for conspiring religious harmony in Karnataka

கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி ஒளிபரப்பப்பட்ட இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து கர்நாடக அரசு இதுபோன்ற தவறான தகவலை வெளியிட்டதற்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தொலைக்காட்சி நிர்வாகத்துக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இதுதொடர்பாக நாளிதழில் பாஜக எம்பி வெளியிட்டு இருந்த விளம்பரத்திலும் கர்நாடக காங்கிரஸ் அரசு சிறுபான்மையினருக்கு மட்டுமே சாதகமாக நடந்துகொள்வதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், பாஜக ஆட்சியிலும் இந்த திட்டம் அமலில் இருந்துள்ளது. அப்போது சிறுபான்மை சமுதாயத்தினர் இதனால் பயனடைந்தார்கள் என்பது காங்கிரஸ் கட்சியினரின் வாதம்.

ஆஜ் தக்கில் வெளியான செய்தியை குறிப்பிட்ட கர்நாடக மாநில அமைச்சர் பிரியங்க் கார்கே, "தீங்கிழைக்கும் செய்தியை வேண்டுமென்றே வெளியிட்டு உள்ளார்கள். அரசு இதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்." என்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் இது தொடர்பாக கர்நாடக சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகம் சார்பில் பெங்களூர் சேஷாதிரிபுரம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இரு பிரிவினர் இடையே மோதலை தூண்டியதாக ஆத் தக் செய்தி வாசிப்பாளர் சுதிர் சவுதாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் இத்திட்டத்தின் மூலம் அரசு அநீதி இழைத்துள்ளதாக அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்து உள்ளார். இது மாநிலத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் சதி." என போலீசார் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளனர். இதில் ஏ1 குற்றம்சாட்டப்பட்டவராக, ஏ2 வாக தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியரும், ஏ3 யாக ஆஜ் தக் தொலைக்காட்சி ஒருங்கிணைப்பாளரும் சேர்க்கப்பட்டு உள்ளார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+