செல்போனில் இருந்த 13,000 ஆபாச போட்டோ! பெங்களூரை அதிரவைத்த பிபிஓ ஊழியர்! காதலி வைத்த செம ட்விஸ்ட்
பெங்களூர்: காதலி உள்பட உடன் பணி செய்யும் பிற பெண்களின் 13 ஆயிரம் ஆபாச போட்டோக்களை செல்போனில் வைத்திருந்த பிபிஓ ஊழியர் வைத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதோடு அந்த நபர் அவரது காதலியாலேயே போலீசில் சிக்க வைக்கப்பட்டது எப்படி? என்பது பற்றி தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூர் பெல்லந்தூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிபிஓ அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானவர்கள் பணி செய்து வருகின்றனர்.

இந்த அலுவலகத்தில் சமீபத்தில் ஆதித்ய சந்தோஷ் (வயது 25) என்பவர் பணிக்கு சேர்ந்தார். இவருக்கும் அந்த அலுவலகத்தில் பணியாற்றி வரும் தான்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு பழக்கம் ஏற்பட்டது
ஒரே அலுவலகத்தில் இருவரும் பணியாற்றி வருவதாக முதலில் நண்பர்களாக பழகினர். அதன்பிறகு இருவர் இடையேயான பழக்கம் என்பது அடுத்தக்கட்டத்துக்கு சென்றது. ஆதித்ய சந்தோஷ் மற்றும் தான்வி ஆகியோர் பரஸ்பரம் காதலிக்க தொடங்கி உள்ளனர். இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 4 மாதங்களாக அவர்கள் இந்த உறவில் இருந்துள்ளனர்.
இந்நிலையில் தான் இருவரும் சேர்ந்து இருப்பதை ஆதித்ய சந்தோஷ் தனது செல்போனில் போட்டோவாகவும், வீடியோவாகவும் எடுத்துள்ளார். இதனை அறிந்த தான்வி அதனை டெலிட் செய்ய கூறினார். ஆனால் ஆதித்ய சந்தோஷ் மறுத்துள்ளார். இதையடுத்து தான்வி ஆதித்ய சந்தோஷின் செல்போனை எடுத்த அந்த போட்டோ, வீடியோவை டெலிட் செய்ய திட்டமிட்டார்.
அதன்படி சில நாட்களுக்கு முன்பு ஆதித்ய சந்தோஷின் செல்போனை அவருக்கு தெரியாமல் தான்வி எடுத்து பார்த்தார். அப்போது அவர் கண்ட காட்சி பேரதிர்ச்சியை கொடுத்தது. அதாவது ஆதித்ய சந்தோஷின் செல்போனில் 13 ஆயிரம் ஆபாச போட்டோக்கள் இருந்துள்ளன. தான்வி மற்றும் அவருடன் பணி செய்யும் பல பெண்களின் ஆபாச போட்டோக்கள் செல்போனில் இருந்ததை பார்த்து அவர் திடுக்கிட்டார்.
அப்போது தான் ஆதித்ய சந்தோஷ் நல்லவர் இல்லை என்பதை தான்யா அறிந்தார். இதையடுத்து அவர் தன்னையும், பிற பெண்களையும் ஆதித்ய சந்தோஷிடம் இருந்து காப்பாற்ற நினைத்தார். இதையடுத்து உடனடியாக அவர் தான் பணிபுரியும் அலுவலகத்தின் உயரதிகாரியிடம் புகாரளித்தார். இதையடுத்து அந்த அலுவலகத்தில் சட்டநிபுணர்கள் ஆலோசனையின் பேரில் சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இந்த புகாரை தொடர்ந்து போலீசார் ஆதித்ய சந்தோஷ் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அலுவலகத்தில் பணி செய்து கொண்டிருந்த அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications