5 ஆண்டுகளில் 90 முறை நடிகை ரன்யா ராவ் துபாய் பயணம்- தங்க கடத்தல் விசாரணை வளையத்தில் சென்னை ஏர்போர்ட்
பெங்களூர்: தங்கக் கடத்தல் தொழிலில் மகாராணியாக வலம் வந்த நடிகை ரன்யா ராவ், 5 ஆண்டுகளில் 90 முறை துபாய் பயணம் மேற்கொண்டதாகவும் இந்த கடத்தல் விவகாரத்தில் சென்னை, ஹைதராபாத், மும்பை விமான நிலையங்களிலும் விசாரணை நடத்தப்பட இருப்பதாகவும் மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கர்நாடகாவில் 12 கிலோ தங்க கட்டிகளை தொடையில் கட்டி வைத்து கடத்தி வந்த போது சிக்கினார் நடிகை ரன்யா ராவ். இவர் தமிழில் வாகா படத்தில் அறிமுகமானார். இவரது வளர்ப்புத் தந்தை கர்நாடகா மாநில டிஜிபி.

நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது வளர்ப்பு தந்தை டிஜிபி மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நடிகை ரன்யா ராவ் கணவரையும் வருவாய் நுண்ணறிவுப் போலீசார் விசாரிக்கின்றனர். ஆனால் ரன்யா ராவ் கணவரோ, தாம் ஒரு மாதம்தான் குடும்பம் நடத்தினேன்; அதன் பிறகு பிரிந்துவிட்டேன் என கூறி வருகிறார்.
இந்த நிலையில் நடிகை ரன்யா ராவின் தங்க கடத்தல் ராஜ்ஜியம் தொடர்பாக பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2020-ம் ஆண்டு முதல் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 90 முறை துபாய்க்கு சென்று வந்துள்ளாராம் ரன்யா ராவ்; மேலும் துபாயில் இருந்து தங்கம் கடத்துவதற்காகவே நகை கடையை அங்கே நடத்தி வந்தும் இருக்கிறார் ரன்யா ராவ். அத்துடன் சென்னை, மும்பை, ஹைதராபாத் விமான நிலையங்கள் வழியாகவும் பல முறை தங்கக் கட்டிகளை ரன்யா ராவ் கடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து சென்னை, மும்பை, ஹைதராபாத் விமான நிலையங்களிலும் மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே ரன்யா ராவ் விவகாரத்தில் வளர்ப்புத் தந்தை டிஜிபியின் தொடர்பு குறித்து விசாரிக்க கர்நாடக மாநில அரசு உயர்நிலைக் குழு ஒன்றை அமைத்தது. இந்த குழு, டிஜிபியிடம் 3 மணிநேரத்துக்கும் மேலாக துருவி துருவி விசாரணை நடத்தியது. இந்த குழுவின் விசாரணை அறிக்கை இன்று மாநில அரசிடம் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த அறிக்கையின் விவரங்கள், ரன்யா ராவ் தங்க கடத்தல் விவகாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications