பெங்களூரில் கால் பதித்த கூகுள்! நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட அனந்தா! சிறப்புகள் என்ன?
பெங்களூர்: பெங்களூரில் கூகுள் நிறுவனம் மிகப் பெரிய அலுவலகத்தை திறந்துள்ளது. இதற்கு அனந்தா (ஆனந்தா) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் 5000 பேர் பணியாற்றும் அளவுக்கு இட வசதி உள்ளது.
இந்த புதிய வளாகத்தை பார்க்கும் போது கூகுளின் உலக அளவிலான செயல்பாடுகளில் வளர்ந்து வரும் இந்தியா பங்கை பிரதிபலிக்கிறது.

பெங்களூரில் மகாதேவாபுரம் எனும் இடத்தில்தான் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நீண்ட காலம் கால் ஊன்றுவதற்கான அனைத்து வசதிகளும் இந்த நிறுவனத்தில் உள்ளன.
பெங்களூர், குருகிராம், மும்பை, புனே உள்பட இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் கூகுளுக்கு 10 ஆயிரம் ஊழியர்கள் உள்ளார்கள். டிஜிட்டல் சேவைகளுக்கும் இணையதள பயன்பாட்டை விரிவுபடுத்தவும் கூகுள் நிறுவனம் அதிகபடியான முதலீட்டை செய்கிறது.
எனவே கூகுள் இந்தியாவின் முக்கியமான நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. மகாதேவபுரத்தில் 1.6 மில்லியன் சதுர அடியில் 5 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றும் வகையில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.
கூகுளின் பிற சேவைகளான ஆன்ட்ராய்டு, மேப்ஸ், டீப் மைன்ட், கிளௌட் உள்ளிட்டவையும் இந்த நிறுவனத்தில் பணியாற்றலாம். இந்த கட்டடத்திற்கு ஆனந்தா என பெயரிடப்பட்டுள்ளது. அப்படியென்றால் எல்லையற்ற என சமஸ்கிருதத்தில் பொருளாகும்.
நவீன கண்ணாடிகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும், ஜாக்கிங் செய்யவும் தனி பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. கண் பார்வையற்றவர்களும் எளிதாக நிறுவனத்தில் தனித்து சென்று வரும் வகையில் தரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு பெரிய மழை நீர் சேகரிப்பு தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது பயன்படுத்தப்பட்ட நீரை 100 சதவீதம் மறுசுழற்சி செய்யும் வசதியும் உள்ளது. சூரிய மின்னாற்றல் பயன்படுத்தப்படுகிறது.
-
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications