ஹிஜாப்புக்கு பதில்.. இதை செய்யலாம்.. பிரச்சினை ஓவர்.. கர்நாடக அரசுக்கு மதகுரு கொடுத்த ஐடியா!
பெங்களூர்: கர்நாடக பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹிஜாப்புக்கு பதில் துப்பட்டா பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என அமீர் இ ஷரியத் தலைவரும், மதகுருவான ஷாகீர் அகமது கான் ரஷாதி கர்நாடக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடகத்தில் கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து செல்ல கர்நாடக அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து மார்ச் 15ல் தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீர்ப்பில் ஹிஜாப் என்பது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசிய விஷயமல்ல எனக்கூறிய உயர்நீதிமன்றம், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் எனக்கூறி கர்நாடக அரசின் உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டது.

முழுஅடைப்பு
இந்த தீர்ப்புக்கு முஸ்லிம் அமைப்பினர், தலைவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். மேலும் கர்நாடகத்தில் அமீர் இ ஷரியத் அமைப்பின் சார்பில் மார்ச் 17 ல் கர்நாடகத்தில் பந்த் நடத்தப்பட்டது. கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம் மக்கள் சார்பில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

ஆலோசனை
இந்நிலையில் அமீர் இ ஷரியத் தலைவர் ஷாகீர் அகமது கான் ரசாதி ஹிஜாப் தடை தொடர்பாக பல்வேறு அரசியல் பிரமுகர்கள், முஸ்லிம் அமைப்பினருடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று கர்நாடக எதிர்க்கட்சி(காங்கிரஸ்) தலைவர் சித்தராமையாவை சந்தித்து பேசினார். அப்போது அவர் ஹிஜாப் தடை குறித்து விவாதித்தார்.

‛துப்பாட்டா’வை அனுமதியுங்க
அதன்பின் ஷாகீர் அகமது கான் கூறுகையில், ‛‛கர்நாடகத்தில் கல்லூரிகளில் ஹிஜாப், புர்கா ஆகியவற்றுக்கு மாற்றாக முஸ்லிம் மாணவிகள் துப்பட்டாவால் தலையை மறைத்து கொள்ள அனுமதிக்க வலியுறுத்த வேண்டும்'' என அவர் கூறினார். மேலும் இதுதொடர்பாக கர்நாடக முன்னாள் முதல்வர்களான சித்தராமையா, குமாரசாமி ஆகியோர் முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் பேச வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.

சட்டசபையில் விவாதம்
இதற்கிடையே உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு முஸ்லிம் மாணவிகள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்த தகவல்கள் காங்கிரஸ் சார்பில் திரட்டப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது நடைபெற்று வரும் கர்நாடக சட்டசபையில் இதுதொடர்பாக விவாதம் நடக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

உச்சநீதிமன்றத்தில் மனு
இதற்கிடையே ஹிஜாப் தடை தொடர்பான கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மாணவிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம், இன்று முன்கூட்டியே விசாரிக்கவும் மறுப்பு தெரிவித்தது. மேலும் தற்போது வரை மனு மீதான விசாரணை குறித்த தேதியையும் உச்சநீதிமன்றம் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications