“அந்த 4.8 கோடி பணத்தை விட்ருங்க”.. ஐஏஎஸ் அதிகாரியிடம் உதவி கேட்ட பாஜக வேட்பாளர்! ‘ஷாக்’ சம்பவம்!
பெங்களூர்: லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளில் பாஜக வேட்பாளர் சுதாகருக்கு சொந்தமான ரூ. 4.8 கோடி பணம் கைப்பற்ற்றப்பட்ட நிலையில், அந்த பணத்தை விடுவிக்க மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் சுதாகர் உதவி கேட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26ஆம் தேதியான நேற்று நடைபெற்றது.

இதில் கர்நாடகாவில் முதற்கட்டமாக 14 தொகுதிகளில் நேற்று தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்பாக, கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சுதாகர் சார்பில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கப்பட்டதாக கூறப்படும் ரூ.4.8 கோடியை பறிமுதல் செய்தது தேர்தல் பறக்கும் படை.
பறக்கும் படையால் கைப்பற்றப்பட்ட ரூபாய் 4.8 கோடி பணம், பாஜக சிக்கபல்லாபூர் லோக்சபா தொகுதி வேட்பாளர் கே.சுதாகருக்கு சொந்தமான என விசாரணையில் தெரியவந்த நிலையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் புகாரையடுத்து அவர் மீது மதநாயக்கனஹள்ளி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ. 4.8 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டவுடன் தேர்தல் அதிகாரி முனிஷ் முட்கலை பாஜக வேட்பாளர் சுதாகர் தொடர்புகொண்டு பேசியுள்ளார். பிடிபட்ட பணத்தை விடுவிக்கும் படியும், வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பி பணத்தை விடுவிக்க சுதாகர் உதவி கோரியதாகவும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி முனிஷ் முட்கல் போலீசில் புகார் அளித்துள்ளார்.

பெங்களூர் மாதிரி நடத்தை விதிமுறை அதிகாரியான முனிஷ் முட்கல் ஐ.ஏ.எஸ்ஸுக்கு, பாஜக வேட்பாளர் சுதாகரின் தொலைபேசி எண்ணிலிருந்து வாட்ஸ்அப் அழைப்பு வந்துள்ளது. 4.8 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் உதவி கேட்டு முனிஷுக்கு வாட்ஸ்அப்பில் மூன்று செய்திகளை அனுப்பியுள்ளார் சுதகர்.
சுதாகர், அந்தப் பணம் போகட்டும் என்று கூறியதாக ஐ.ஏ.எஸ் அதிகாரி தனது புகாரில் தெரிவித்துள்ளார். அதாவது, அதை பிடிக்க வேண்டாம் விட்டுவிடுங்கள் என்ற வகையில் சுதாகர் கூறியுள்ளார். இதுதொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி முனிஷ் முட்கல் போலீசில் புகார் அளித்த நிலையில், மதநாயக்கனஹள்ளி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாஜக வேட்பாளருக்கு சொந்தமாண ரூ. 4.8 கோடி பணம் கைப்பற்றப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், அந்த பணத்தை விடுவிக்க, பாஜக வேட்பாளரே நேரடியாக ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் உதவி கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக!












Click it and Unblock the Notifications