பெங்களூரில் நாளை மின்தடை.. சாந்தி நகர் உள்பட எந்தெந்த ஏரியாக்கள் பாதிக்கப்படும்? முழு லிஸ்ட்
பெங்களூர்: பெங்களூரில் நாளை (ஜனவரி 2) பல்வேறு இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது. பெங்களூரில் ‛பெஸ்காம்' சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் முழு விவரம் வருமாறு:
தமிழகத்தை போல் கர்நாடகாவிலும் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஒருநாள் அறிவிக்கப்பட்ட மின்தடை அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜனவரி 2ம் தேதி பெங்களூரில் பல்வேறு இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.

இதுதொடர்பாக பெங்களூர் மின் விநியோக நிறுவனம் ‛பெஸ்காம்' முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
‛‛பெங்களூரில் ஜனவரி 2ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இந்த பணியின் காரணமாக நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நகரின் சில இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
அதன்படி நாகரபாவி டிவிஷனில் நாகரபாவி, மஞ்சுநாத் நகர், காளிதாஸ் லே-அவுட், சாந்தி நகர், கொட்டிகேபாளையா, குடிநீர் விநியோகம் மற்றும் பம்பிங் ஸ்டேஷன் ஏரியாக்கள் மற்றும் அதனை சுற்றிய குடியிருப்பு மற்றும் வணிக கட்டங்களுக்கு மின்சப்ளை இருக்காது.
இதனால் பொதுமக்கள் மின்சாரம் தடைப்படும் நேரத்தை அறிந்து அதற்கு ஏற்ப தங்களின் பணிகளை திட்டமிட்டு வைத்து கொள்ள வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications