Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்நாடகாவில் மாஸ் காட்டும் காங்கிரஸ்.. பாஜகவுக்கு கஷ்டம் தானாம்.. வெளியான புது எக்ஸிட் போல் சர்வே!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் இன்று சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதற்கிடையே கர்நாடக தேர்தலில் எந்தக் கட்சி வெல்லும் என்பது குறித்து இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

கர்நாடகாவில் இன்று சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அங்கே மொத்தம் 224 தொகுதிகள் இருக்கும் நிலையில், அத்தனை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது.

 India TV-CNX exit polls says Congress will win comfortably with 110-120 seats

காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மதியத்திற்கு மேல் விறுவிறுப்பாக நடைபெற்றது. பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.

சட்டசபைத் தேர்தல்: கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ள நிலையில், அங்கே இப்போது பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற சூழல் இருக்கிறது. இந்த மெஜாரிட்டி நம்பரைப் பெற பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி இருந்து வருகிறது. ஓல்ட் மைசூர் உள்ளிட்ட பிராந்தியங்களில் ஜேடிஎஸ் கட்சியும் கடும் போட்டி தந்து வருகிறது.

பாஜக இப்போது தென் மாநிலங்களில் கர்நாடகாவில் மட்டுமே ஆட்சியில் இருக்கிறது. இதனால் எப்படியாவது ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக இறங்குகிறது. அதேநேரம் ஊழல் குற்றச்சாட்டுகளால் மாநில பாஜக அரசு மீது கடும் அதிருப்தி இருப்பதால் எளிதாக வெல்வோம் என்று காங்கிரஸ் உடன் இறங்குகிறது. இதனால் கடைசிக் கட்டத்தில் அங்கே கடும் போட்டி நிலவியது.

கருத்துக் கணிப்பு முடிவுகள்: இன்று மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், இப்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. இப்போது இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் காங்கிரஸுக்கு 110-120 இடங்களைப் பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில், அதை அடையக் காங்கிரசுக்கு அதிக வாய்ப்பு இருக்கவே செய்கிறது.

அதைத் தொடர்ந்து பாஜகவுக்கு 80-90 இடங்களும் ஜேடிஎஸ் கட்சிக்கு 20-24 இடங்கள் கிடைக்கும் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. சுயேச்சைகள் மற்றும் இதர கட்சிகள் 1-3 இடங்களில் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் பலவற்றில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையைப் பெறும் என்றே கூறப்பட்டது. இருப்பினும், கடைசிக் கட்டத்தில் பாஜக தீவிர பிரசாரத்தில் இறங்கிய நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் சற்று கலவையாகவே வந்துள்ளன. பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் தொங்கு சட்டசபை அமையவே வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

குமாரசாமி: தொங்கு சட்டசபை அமைந்தால் ஆட்சியை அமைக்க எந்தவொரு கட்சியும் நிச்சயம் ஜேடிஎஸ் ஆதரவு தேவைப்படும். அப்போது தன்னை முதல்வராக்க வேண்டும் என்று குமாரசாமி வலியுறுத்துவார். எனவே, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் வந்தது போலத் தொங்கு சட்டசபை அமைந்தால் அது ஜேடிஎஸ் கட்சிக்குக் கொண்டாட்டமாகவே இருக்கும்.

இருப்பினும், கருத்துக்கணிப்புகளில் வரும் முடிவுகள் அப்படியே தேர்தல் முடிவுகளாக இருக்கும் என்று நம்மால் 100% சொல்ல முடியாது. பல நேரங்களில் கருத்துக்கணிப்பும் உண்மை முடிவுகளும் மாறியுள்ளன. எனவே, இந்த முறை கர்நாடக மக்கள் எந்த கட்சி தங்களை ஆள வேண்டும் என்று தீர்மானித்து உள்ளனர் என்பதை அறிந்து கொள்ள நாம் மேலும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+