நாளை IPL ஃபைனல்.. வெறியில் RCB ரசிகர்கள்! பெங்களூரில் பார், பப்களில் நிரம்பி வழியும் புக்கிங்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: நாளை ஐபிஎல் இறுதி போட்டி நடக்க இருக்கிறது. இதில் பெங்களூர்(ஆர்சிபி) அணியுடன் பஞ்சாப் மோதுகிறது. இதற்கு முன்னர் மூன்று முறை இறுதி சுற்றுக்கு சென்று கப் அடிக்காமல் ஆர்சிபி தவறவிட்டிருக்கிறது. எனவே இந்த முறையாவது கப் அடிக்குமா? என்று எதிர்பார்ப்புகள் எழுந்திருப்பதால், நாளைய தினம் பெங்களூரில் ஓட்டல்கள், பப்கள், பார்களில் முன்பதிவு எகிறியிருக்கிறது.

"கண்ணன் தேவன் டீ குடி.. 'ஆர்சிபி' புடி புடி" என அவர்கள் பாட்டை, அவர்களுக்கு எதிராகவே சிஸ்எஸ்கே ட்ரெண்ட் செய்து வரும் நிலையில், இந்த முறையாவது "டேய் பரமா கப் அடிடா" என ஆர்சிபி ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். எனவே நாளை நடக்கும் ஃபைனல் மேட்சை தவறவிடும் மனநிலையில் யாரும் இல்லை. இதனால் பெங்களூரில் வணிகர்களுக்கு கல்லா கட்ட தொடங்கியிருக்கிறது. முன்பதிவுகள் முன்னெப்போதைவிடவும் இப்போது எகிறியிருப்பதாக ஓட்டல் ஓனர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

IPL 2025 RCB

"வழக்கமாக செவ்வாய்க்கிழமைகளில் கடையில் ஈ அடிக்கும். அங்கொன்றும் இங்கொன்றுமாக காதல் ஜோடிகள்தான் இருக்கும். ஆனால் இந்த செவ்வாய்.. கோல்டன் செவ்வாய். ஃபைனல் மேட்ச் இருப்பதால், புக்கிங் நிரம்பியிருக்கிறது. மேலும் புக்கிங் செய்ய அழைப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. என்ன செய்வதென்றே தெரியவில்லை" என ஓட்டல் ஓனர்கள் கூறியுள்ளனர்.

மராத்தஹள்ளியில் உள்ள 'லாங் போட் ப்ரூயிங் கோ' எனும் பார் உரிமையாளர் கூறுகையில், "நம்ம கடையில் என்னைக்குமே கூட்டம் இருக்கும். செவ்வாய்க்கிழமைகளில் 350-400 பேர் வரை வழக்கமாக வருவார்கள். ஆனால் இந்த செவ்வாய் அன்று 700-800 பேர் வருவார்கள், எண்ணிக்கை டபுள் ஆகும் என்று எதிர்பார்க்கிறோம்" என கூறியுள்ளார்.

அதேபோல, "நாளை வழக்கத்தை விட 3 மடங்கு அதிகமான ஆட்கள் வருவாருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை ஆர்சிபி தகுதி சுற்றில் ஜெயித்தபோதும் நன்றாக கல்லா கட்டியது. எல்லா கிளைகளிலும் ரசிகர்கள் குவிந்திருந்தனர். நாளையும் இதேபோல இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என Impresario Handmade ரெஸ்டாரன்ட்டின் வணிக மேலாளர் கூறியுள்ளார்.

ஆர்சிபி ரசிகர்களை வாடிக்கையாளர்களாக மாற்ற, ஓட்டல்கள், பார்கள், பப்புகள், தீவிரமாக வேலை பார்க்க தொடங்கியுள்ளன. பெரிய எல்இடி திரையை அமைத்து மேட்சை லைவாக ஒளிபரப்புவது, பிரபலமான கன்னட பாலங்களை ஒலிக்கவிடுவது, ஆர்சிபி டாட்டூ, முகத்தில் ஆர்சிபி வண்ணத்தை வரைதல் என பல யுக்திகளை வணிகர்கள் கையில் எடுத்திருக்கின்றனர்.

இரண்டு தளங்களில் பார் வைத்திருக்கும் உரிமையாளர் ஒருவர் கூறுகையில், "8க்கு 12ft அளவுக்கு பெரிய எல்இடி டிஸ்ப்ளே வைத்து அதில் மேட்சை நாங்கள் ஒளிபரப்ப இருக்கிறோம். நாளைய தினம் சிறப்பு உணவாக 32 அங்குல பீட்சாவையும் அறிமுகப்படுத்த இருக்கிறோம்" என்றும் கூறியுள்ளார். சமீபத்தில் பீர் விலை ஏறியதால் பார் வணிகம் கொஞ்ச காலமாக டல்லாகவே போய்க்கொண்டிருந்தது. இதனை நாளை நடக்கும் ஃபைனல் மேட்ச் சரி செய்யும் என்றும் எதிர்பார்ப்பதாக வணிகர்கள் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+