115 ஆண்டு ‛ரெக்கார்டு'காலி? காலை முதல் பெங்களூரில் கொட்டித்தீர்த்த கனமழை.. 1909க்கு பின் அதிசயம்
பெங்களூர்: பெங்களூரில் இன்று அதிகாலை முதல் பல இடங்களில் கன மழை பெய்தது (Bangalore Rain). இந்நிலையில் தான் 115 ஆண்டுகள் கழித்து 1909ம் ஆண்டு ரெக்கார்டை இன்றைய மழை காலி செய்ய வாய்ப்புள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெங்களூரில் 105.5 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதனால் நேற்றைய தினம் பெங்களூரில் தாழ்வான இடங்களில் மழைநீர் புகுந்தது. குடியிருப்புகள், சாலைகளை மழைநீர் சூழ்ந்து கொண்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பெங்களூரில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 105.5 மில்லிமீட்டர் மழை பெய்திருந்தது. இது கடந்த 2011ம் ஆண்டில் இருந்து பார்த்தால் மே மாதத்தில் 24 மணிநேரத்தில் அதிக மழை பெய்த ரெக்கார்டில் 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் கடந்த 2022ம் ஆண்டு மே மாதத்தில் 24 மணிநேரத்தில் 114.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

மேலும் மே மாதத்தை எடுத்து கொண்டால் இதற்கு முன்பு 1909 ம் ஆண்டு மே மாதம் 6ம் தேதி மட்டும் 153.9 மில்லிமீட்டர் மழை பெய்தது. இன்று காலை முதல் பெங்களூரில் பல இடங்களில் கனமழை பெய்துது. காலை 9 மணிக்கு மேல் மழை விட்டுள்ளது. ஆனால் மிதமானது முதல் கனமழைக்கான மஞ்சர் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் 1909ம் ஆண்டில் தான் மே மாதத்தில் ஒரு நாளில் அதிக மழை பெய்தது என் ரெக்கார்ட் இந்த ஆண்டு உடைக்கப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த கனமழையின் காரணமாக சில்க்போர்டு, எலக்ட்ரானிக் சிட்டி மற்றும் அதனை சுற்றிய பல இடங்களில் மழை வெள்ளம் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. கார்கள், பைக்குகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. மேலும் பெங்களூரில் இன்று பெய்த கனமழையின் காரணமாக காலையில் பணிக்கு சென்ற மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். மேலும் மழையின் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

இப்லூர் சந்திப்பில் இருந்து சர்ஜாபரா ரோடு, கஸ்தூரி நகரில் இருந்து டின் பேக்டரி, ஹூடி பாலத்தில் இருந்து ஹூடிசர்க்கிள் வரை, கொரகுண்டே பாளையாவில் இருந்து முத்தியம்மா சந்திப்பு வரை வாகனங்கள் மிகவும் மெதுவாக நகர்ந்து சென்றன. அதேபோல் மழை வெள்ளம் காரணமாக பெங்களூர் ஓசூர் ரோட்டில் சில்க் ரோடு முதல் ரூபேன அக்ரஹாரா வரை சாலை மற்றும் மேம்பாலம் என்பது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications